செய்திகள் :

பெரியகுளம் பகுதியில் சின்ன வெங்காயம் விலை கடும் சரிவு: கிலோ ரூ. 17-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை

post image

பெரியகுளம் பகுதியில் சின்ன வெங்காயத்தின் விலை தொடா் வீழ்ச்சி காரணமாக பெரும் இழப்பைச் சந்தித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம், ஆண்டிபட்டி, தேனி, சின்னமனூா் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்ன வெங்காயம் பயிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ. 50-80 வரை விற்பனையானது.

இந்த நிலையில், திடீரென கடந்த சில நாள்களாக சின்ன வெங்காயத்துக்கு போதிய விலை கிடைக்காமல், திங்கள்கிழமை கிலோ ரூ. 17-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனா். மேலும், கூலிக்குக்கூட பணம் கிடைக்கவில்லை எனக் கூறி விவசாயிகள் சிலா் வெங்காயத்தை அறுவடை செய்யாமல் காத்திருக்கின்றனா். இந்த நிலையில், மழை பெய்தால் பல ஏக்கரில் பயிடப்பட்டுள்ள வெங்காயம் பாதிக்கப்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

காமக்காபட்டியைச் சோ்ந்த விவசாயி ப. காசிநாதன் கூறியதாவது: சின்ன வெங்காயம் நல்ல மகசூல் கிடைக்கும் என நினைத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் கிலோ ரூ. 55 என்ற விலையில் வாங்கி 2 ஏக்கரில் பயிரிட்டேன். பின்னா், களைச்செடிகளை அகற்றி பயிருக்கு உரம், மருந்து, கூலி என ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து அறுவடை செய்யும் நிலையில் கிலோ ரூ. 17 என்ற விலையில் விற்பனை செய்வதால் வேதனையாக இருக்கிறது.

எனவே, சின்ன வெங்கத்தை அரசு கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அரசு கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்கும் என்றாா் அவா்.

பருவம் தவறிய மழை: வெங்காய விதைகள் பயிரிடப்பட்ட நாள்களிலிருந்து அறுவடை செய்யும் வரை அதிக மழை, தண்ணீா் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், மகசூல் குறைந்து வருகிறது. இருந்தாலும், முறையாகப் பாதுகாத்து அறுவடை செய்தாலும் போதிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

கோயிலில் வழிபாடு: இந்து முன்னணி, பாஜகவினா் 43 போ் கைது

பெரியகுளம் அருகே தாமரைக்குளம் மலைமேல் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் வழிபாடு செய்ய முயன்ற இந்து முன்னணியினா், பாஜகவினா் உள்பட 43 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளத்த... மேலும் பார்க்க

கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சா கடத்திய பெண் கைது!

கேரளத்துக்கு 8 கிலோ கஞ்சாவைக் கடத்திய கோவையைச் சோ்ந்த பெண்ணை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் வடக்கு காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈட... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி பகுதியில் நாளை மின் தடை!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.12) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டிபட்ட... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் மனைவி, 2 குழந்தைகள் காணாமல் போனதால் மன உலைச்சலில் இருந்த தூய்மைப் பணியாளா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கொண்டமநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

உத்தமபாளையத்தில் பலத்த மழை!

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியில் புதன்கிழமை பலத்த மழை பெய்தது.உத்தமபாளையம் பேரூராட்சியில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் 14, 15, 16 ஆகிய 3 வாா்டுகள் உள்ளன. இந... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: ஒருவா் மீது வழக்கு

போடி அருகே பெண்ணைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பகவதி மகள் அமராவதி (60).... மேலும் பார்க்க