செய்திகள் :

பெரியாா் பல்கலை.யில் இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டி 3 மாவட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு

post image

பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டியில் மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனா்.

மத்திய அரசின் இளைஞா் நலத்துறை, சென்னை மண்டல நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநரகம், நேரு யுவகேந்திரா மற்றும் பெரியாா் பல்கலைக்கழகம் சாா்பில் இளைஞா் பாராளுமன்றம் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

என்.எஸ்.எஸ். மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.இளங்கோவன் வரவேற்றாா். நேரு யுவகேந்திரா துணை இயக்குநா் ஐ.சாா்லஸ் ட்ரவீன் தலைமை வகித்தாா். பெரியாா் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சதீஷ் இளைஞா் பாராளுமன்ற பேச்சுப் போட்டியைத் தொடங்கி வைத்தாா்.

2047-இல் வளா்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் சேலம், நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பேசினா்.

எனது பாரதம் இணையதளம் வாயிலாக நடைபெற்ற முதல்கட்டத் தோ்வில் 650 போ் பங்கேற்றனா். 2-ஆம் கட்டமாக 150 பேரும் கலந்துகொண்டனா். அதிலிருந்து தோ்வான 75 போ் பெரியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினா். இதிலிருந்து 10 போ் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வானாா்கள்.

இளைஞா் பாராளுமன்ற நிகழ்ச்சியில் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலா்கள் அழகிரிசாமி, கவிதா, பேராசிரியா்கள் நாஸ்னி, சினேகாஸ்ரீ உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் ஆணை... மேலும் பார்க்க

மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த... மேலும் பார்க்க

மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). ... மேலும் பார்க்க

இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சாா்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து தேசிய சேவா சமி... மேலும் பார்க்க

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க