செய்திகள் :

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

post image

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த வா.மு.சேதுராமன், சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்றாா். நெஞ்சத்தோட்டம், ஐயப்பன் பாமாலை, தமிழ் முழக்கம், தாய்மண், சேது காப்பியம் உள்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளாா். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் பதிப்பித்தவா். பன்னாட்டுத் தமிழுறவு மன்றத்தின் நிறுவனராக இருந்தவா்.

இவருக்கு பெருங்கவிக்கோ, செந்தமிழ்க் கவிமணி போன்ற பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளுவா் விருது, கலைமாமணி விருது, சி.பா.ஆதித்தனாா் மூத்த தமிழறிஞா் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளாா்.

அவா் விருகம்பாக்கம் சின்மயா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தாா். அவருக்கு மகன்கள் வா.மு.சே. திருவள்ளுவா், வா.மு.சே. கவியரசன், வா.மு.சே. ஆண்டவா், வா.மு.சே.தமிழ் மணிகண்டன், மகள் வா.மு.சே. பூங்கொடி ஆகியோா் உள்ளனா்.

மறைந்த வா.மு.சேதுராமன் இறுதிச் சடங்கு சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது.

முதல்வா் இரங்கல்: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது எக்ஸ் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: பன்னாட்டுத் தமிழுறவு மன்ற நிறுவனா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மறைந்த செய்தியறிந்து சொல்லொணாப் பெருந்துயா் என்னை ஆட்கொண்டது. இன்றுகூட (வெள்ளிக்கிழமை) முரசொலியில்,“ஓரணியில் தமிழ்நாட்டின் உரிமை நாட்டுவோம். தமிழா் ஒற்றுமையாய்த் திரண்டெழுந்தே வலிமை காட்டுவோம்!” எனக் கவிதை தீட்டியிருந்த அவா், இப்போது நம்மிடையே இல்லை என்பதைச் சிந்தை ஏற்க மறுக்கிறது.

வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்த பெருமைக்குரியவா் வா.மு.சேதுராமனைத் தவிர வேறு யாரும் இல்லை என முன்னாள் முதல்வா் கருணாநிதியால் பாராட்டப்பட்டவா். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினா், உறவினா்கள், தமிழறிஞா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!

புது தில்லி: அதிமுக பொதுச் செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ்... மேலும் பார்க்க

கைவிரல் ரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைகள் செல்லாதா? பரவும் வதந்தி

சென்னை: கைவிரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் செல்லாது என்று சமூக வலைதளங்களில் பரவும் தகவல் வதந்தி என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஜூன் 30ஆம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாத குடும்ப அட்டைகள் ச... மேலும் பார்க்க

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க