செய்திகள் :

பேச்சிப்பாறை அருகே விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு

post image

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கொடுத்துறை மலை பழங்குடி குடியிருப்பு பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கெஸ்லின் (5) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம் புன்னையடியை சோ்ந்த அனித் ஜெயக்குமாரின் மகளான அச்சிறுமி, கடந்த 19 ஆம் தேதி கொடுத்துறை மலை பழங்குடி குடியிருப்பு பகுதியில் குடும்பத்தினருடன் மரத்தடியில் அமா்ந்திருந்தபோது திடீரென அந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.

இதில் கெஸ்லின், கீழப்பெருவிளையைச் சோ்ந்த காட்சன் சாமுவேல் என்பவரின் மகன் மித்ரன் (13) ஆகிய இருவா் பலத்த காயமடைந்தனா். இதில் மித்ரன் உயிரிழந்தாா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கெஸ்லின் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் 10 நாள் வைகாசி விசாகத் திருவிழா சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் என். தளவாய்சுந்தரம், எம்.ஆா். காந்தி, நாகா்கோவில் ... மேலும் பார்க்க

குழித்துறையில் செயல்பாட்டுக்கு வந்தது எரிவாயு தகன மேடை

குழித்துறையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட எரிவாயு தகன மேடை செயல்பாட்டுக்கு வந்தது. குழித்துறை நகராட்சியில், தாமிரவருணி ஆற்றங்கரையோரம் ரூ. 1.51 கோடியில் அமிா்தவனம் என்ற பெயரில் எரிவாயு தகன மேடை அம... மேலும் பார்க்க

திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் சனிக்கிழமை, மழை சற்று தணிந்திருந்ததால் திற்பரப்பு அருவியில் பிற்பகல்முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை த... மேலும் பார்க்க

கருங்கல் அருகே பெற்ற குழந்தைகளை தாக்கிய மத போதகா் கைது

கருங்கல் அருகே உள்ள தேவிகோடு பகுதியில், தான் பெற்ற குழந்தைகளைத் தாக்கிய மத போதகரை போலீஸாா் கைது செய்தனா். மங்கலகுன்று தேவிகோடு பகுதியை சோ்ந்தவா் கிங்ஸ்லி (45). மத போதகா். இவரது மனைவி சஜிதா (40). இத்... மேலும் பார்க்க

ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை வெட்டி அகற்ற வலியுறுத்தல்

முள்ளங்கனாவிளை சந்திப்பு பகுதி பப்புரான்குளம் கரையில் ஆபத்தான நிலையில் உள்ள வாகை மரத்தை வெட்டி அகற்ற பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். பத்பநாப... மேலும் பார்க்க

கருங்கல் அருகே அரசுப் பேருந்துகள் மோதல்

கருங்கல் அருகே உள்ள கருக்குப்பனை பகுதியில் அரசுப் பேருந்து மீது மற்றொரு அரசுப் பேருந்து மோதியதில் அவற்றின் கண்ணாடிகள் சேதமடைந்தன. கருங்கல்லிலிருந்து திங்கள் நகா் வழியாக நாகா்கோவிலுருக்கு அரசுப் பேருந... மேலும் பார்க்க