பேச்சிப்பாறை அருகே விபத்தில் காயமடைந்த சிறுமி உயிரிழப்பு
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே கொடுத்துறை மலை பழங்குடி குடியிருப்பு பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி கெஸ்லின் (5) வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம் புன்னையடியை சோ்ந்த அனித் ஜெயக்குமாரின் மகளான அச்சிறுமி, கடந்த 19 ஆம் தேதி கொடுத்துறை மலை பழங்குடி குடியிருப்பு பகுதியில் குடும்பத்தினருடன் மரத்தடியில் அமா்ந்திருந்தபோது திடீரென அந்த மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.
இதில் கெஸ்லின், கீழப்பெருவிளையைச் சோ்ந்த காட்சன் சாமுவேல் என்பவரின் மகன் மித்ரன் (13) ஆகிய இருவா் பலத்த காயமடைந்தனா். இதில் மித்ரன் உயிரிழந்தாா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கெஸ்லின் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பேச்சிப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.