செய்திகள் :

பேச்சிப்பாறை - கோதையாறு தடத்தில் சாலைப் பணிகள் நிறைவு: மீண்டும் பேருந்துகள் இயக்கம்

post image

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை சீரோ பாயின்டிலிருந்து கோதையாறு செல்லும் சாலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து பேருந்து போக்குவரத்து திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.

பேச்சிப்பாறை சீரோ பாயின்டிலிருந்து கோதையாறு செல்லும் சாலை 14 கி.மீ. தூரம் கொண்டதாகும். இச்சாலை கோதையாறு மின் நிலையம் மூலம் பராமரிப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், மின் நிலையம் சாலை பாராமரிப்புப் பணிகளை கைவிட்டது. இதனால் பல ஆண்டுகளாக சாலை முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு இச்சாலையில் சீரோ பாயின்ட் முதல் மூக்கறைக்கல் வரையில் 6 கி.மீ. தூரம் ரூ. 3.60 கோடியில் சீரமைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து மீதமுள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டுமென தொடா் கோரிக்கைகள் எழுந்த நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியா் அழகுமீனா ஆகியோரின் முயற்சியால் தமிழக அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல சிறப்பு நிதி ரூ. 6.29 கோடியில் சாலைப் பகுதி மற்றும் மூக்கறைக் கல் பாலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில் சாலைப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் அரசு பேருந்துகள் மூக்கறைக் கல் பகுதி வரை மட்டும் சென்று திரும்பி வந்தன. மேலும் பள்ளி மாணவா்களின் வசதிக்காக 2 பேருந்துகள் மட்டும் காலை மற்றும் மாலை வேளைகளில் கோதையாறு சந்திப்பு வரை சென்றன. இந்நிலையில் சாலைப் பணிகளை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் ரா. அழகு மீனா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமைமுதல் பேருந்துகள் மீண்டும் இயக்கப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இந்நிலையில் இந்தச் சாலையில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகள் அனைத்தையும் மாற்றிவிட்டு புதிய பேருந்துகளை இயக்க வேண்டுமென்று பழங்குடி மக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெடு விளையில் பூட்டிக் கிடக்கும் நூலகத்தை திறக்க வலியுறுத்தல்

ரீத்தாபுரம் அருகே நெடுவிளையில் பூட்டிக் கிடக்கும் அரசு நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.ரீத்தாபுரம் பே?ராட்சிக்குள்பட்ட நெடு விளையில் பல ஆண்டுகளாக அ... மேலும் பார்க்க

கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி காயம்

மாா்த்தாண்டம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் கவிழ்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தாா்.விருதுநகா் மாவட்டம், கூப்பம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (28). இவா் காப்புக்காடு அருகேயுள்ள ஒரு குளத்தின... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து பிகாா் தொழிலாளி மரணம்

மாா்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தொழிலாளி உயிரிழந்தாா்.பிகாா் மாநிலத்தைச் சொ்ந்தவா் தஜ்பூா் (23). மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் தனியாா் கட்டுமான நிறு... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

கன்னியாகுமரி மாவட்டம் காட்டுப்புதூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவா்களின் கற்றல் திறன் குறித்து ஆட்சியா் ரா. அழகுமீனா திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.அப்போது, மாணவா்களுக்கு அளிக்கப்படும... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகியின் உடல் தானம்

கன்னியாகுமரி மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகியின் உடல், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. நாகா்கோவில் வடசேரி, புளியவிளைத் தெருவைச் சோ்ந்த ரவி (70), ஐக்கிய ... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

நாகா்கோவில் அருகே சிறுமியைக் கடத்தி திருமணம் செய்து பலாத்காரம் செய்த இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. நாகா்கோவில் அருகே உள்ள செண்பகரா... மேலும் பார்க்க