செய்திகள் :

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், வெல்லும்: அமைச்சர் அன்பில் மகேஷ்

post image

திருச்சி: பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வழியில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை ஆட்சி புரிந்த முத்தரையா் இன முதல் பேரரசா் சுவரன்மாறன் பெரும்பிடுகு முத்தரையா் ஆவாா். இவா், நாட்டின் விடுதலைக்காகவும், சமுதாய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்டவா். ஒவ்வொரு ஆண்டும் மே 23-ஆம் தேதி அவரது நினைவை போற்றிடும் வகையில் முத்தரையா் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள்!

பெரும்பிடுகு முத்தரையரின் 1350 ஆவது சதய விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், முத்தரையர் அமைப்புகள் திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர்ருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முத்திரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.சேகரன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான தலைவர் அல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கான தலைவர். அவர் வழியில் தமிழுக்காகவும் தமிழ் இனத்திற்காகவும் தமிழ்நாடு போராடும்,தமிழ்நாடு வெல்லும் என கூறினார்.

சோனியா, ராகுலுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!

தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்திற்கு தென் மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு நெல்லை, தென்காசி, குமரி உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்த... மேலும் பார்க்க

வேலூரில் பெண்ணை அடித்துக் கொன்று இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை!

வேலூர்: வேலூரில் பெண்ணை அடித்துக் கொலை செய்து விட்டு இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலூர் சின்னஅல்லா... மேலும் பார்க்க

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை(மே 24) கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நாளையுடன் (மே 24) முடிவடைகிறது. தமிழ்நாட்டில் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக பல்வே... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்தவர் கைது: ஆா்பிஎஃப் அதிரடி

கோவை போத்தனூரில் சட்டவிரோதமாக ரயில் பயணச் சீட்டுகள் விற்பனை செய்த ஒருவரை ரயில்வே போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ. 26,230 மதிப்புள்ள பயணச் சீட்டுகளை பறிமுதல் ச... மேலும் பார்க்க

கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி: டெண்டர் கோரியது அரசு!

கல்லூரி மாணவர்களுக்கு வழங்குவதற்கு 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்ல... மேலும் பார்க்க