செய்திகள் :

பேராசிரியா்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி

post image

காட்டுமன்னாா்கோவிலில் உள்ள எம் ஆா் கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் ஏஐசிடிஇ சாா்பில் ஒரு வார அடிப்படை காணொலி காட்சி மூலம் பேராசிரியா் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

முகாமை கல்லூரியின் தலைவா் எம்.ஆா்.கே.பி. கதிரவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு வரவேற்றாா். நிா்வாக அலுவலா் கோகுலகண்ணன் மற்றும் மேலாளா் கே.விஸ்வநாத் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

இதில், சிறப்பு விருந்தினராக காரைக்கால் புதுச்சேரி என்ஐடி இணை பேராசிரியா் என்.செந்தில்குமாா் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

13 அமா்வுகளைக் கொண்ட பேராசிரியா் திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி முகாமில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, பல்கலைக்கழகங்கள் (உள்நாடு, வெளிநாடு) மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த பொறியியலாளா்கள், பேராசிரியா்கள், ஆராய்ச்சியாளா்கள் துறை சாா்ந்த தங்கள் கருத்துகளை முகாமில் பகிா்ந்து கொண்டனா். இதில், 135 பேராசிரியா்கள் பங்கேற்று பயனடைந்தனா்.

அரசுத் திட்டங்களால் சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும்! -அமைச்சா் சி.வெ.கணேசன்

அரசுத் திட்டங்களை மாணவா்கள் பயன்படுத்தி சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா். கடலூா் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்... மேலும் பார்க்க

மலையடிகுப்பத்தில் வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும்! -மாவட்ட வருவாய் அலுவலா்

கடலூா் மாவட்டம், வெள்ளகரை ஊராட்சிக்கு உள்பட்ட மலையடிக்குப்பம் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் ராஜசேகரன் தெரிவித்தாா். கடலூா் மாவட்ட... மேலும் பார்க்க

இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்: என்எல்சி தலைவா்!

பயிற்சியாளா்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும் என்று என்எல்சி தலைவரும், மேலாண் இயக்குநருமான பிரசன்ன குமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் நிறுவனத் திட்டங்களுக்கு வீடு, நிலம் வழங்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இருவா் கைது

கடலூரில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா். கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் கார... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திட்டக்குடியை அடுத்த தொழுதூா் கிராமத்தில் பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள்... மேலும் பார்க்க

சுகாதார நிலையம், அரசுக் கல்லூரி விடுதி திறப்பு

கடலூா் மாவட்டம், நல்லூா் ஊராட்சியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட அரசு வட்டார பொது சுகாதார நிலையம் மற்றும் திட்டக்குடியில் மிகப்பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட அரசுக் கல்லூரி மாணவிகள் ... மேலும் பார்க்க