செய்திகள் :

பேராவூரணி: வீடு புகுந்து 500 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கர்கள் கொள்ளையடித்த கும்பல்.. மக்கள் அச்சம்!

post image

பட்டுக்கோட்டை, பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவசேனன் (66). இவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை செய்கிறார். மருமகள் அஸ்வினி கடலுாரில் தங்கி மருத்துவ மேற்படிப்பு படிக்கிறார். இந்நிலையில், தேவசேனன் அவரது மனைவி பூங்கோதை இருவரும் கடந்த மார்ச் 22ம் தேதி, மருமகள் அஸ்வினியை பார்க்க கடலுார் சென்று விட்டனர்.

திருட்டு நடந்த வீடு

இதையடுத்து ஆள் இல்லாததால் வீடு பூட்டப்பட்டிருப்பதை அறிந்த கொள்ளையர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த இரண்டு இரும்பு லாக்கரை துாக்கி சென்று விட்டனர். இதைத் தொடர்ந்து 24ம் தேதி காலை, தேவசேனன் வீட்டில் வேலை பார்க்கின்ற ஜோதி வீட்டு வேலைக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தவர் தேவசேனனுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, தேவசேனனின் உறவினர் காந்தி, வீட்டில் வந்து பார்த்துவிட்டு இரண்டு லாக்கர் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உடனே கடலுாரில் இருந்து திரும்பிய தேவசேனன் இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீஸில் புகார் அளித்தார். விசாரணையில், கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, மர பீரோக்களை திறந்து பார்த்துள்ளனர். அதில் எந்த பொருளும் இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

திருட்டு

அதன் பின்னர் 250 கிலோ எடை கொண்ட இரண்டு இரும்பு லாக்கரை தூக்கி சென்றுள்ளனர். 80 அடி துாரத்திற்கு லாக்கரை இழுத்துச் சென்றதுடன் முள்வேலியை நறுக்கி, வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு லாக்கரில் 12 கிலோ வெள்ளி பொருட்கள், 12 சவரன் தங்க நகை இருந்ததாக தேவசேனன் போலீஸில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. தலா 250 கிலோ டை கொண்ட அந்த இரும்பு லாக்கரை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தூக்கி செல்வதற்கு குறைந்தது ஆறு பேர் வேண்டும். கொள்ளையர்கள் மாடியிலிருந்து இறக்கி, தூக்கி சென்றுள்ளனர். இதன் மூலம் ஒரு கும்பலாக கொள்ளையடிக்க வந்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். கடந்த ஓரு வருடத்தில் மருங்கப்பள்ளம், நாடியம், ஊடையக்காடு பகுதிகளில் ஆளில்லாத வீடுகளை குறி வைத்து, 6 வீடுகளில் கொள்ளையர்கள் திருடியுள்ளனர். ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

புதுக்கோட்டையில் மனைவியைச் சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவர்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலத்தைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மகள் இந்திராணி (வயது 37).இவருக்கு ஏற்கனவே திருமணமாகி தவபாலன் (வயது 12) என்ற ஆண் குழந்தை உள்ள நிலையில், கணவரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `அப்பா ஆம்புலன்ஸில போறார், ப்ளீஸ் விடுங்கண்ணா’ - கெஞ்சிய சிறுவனிடம் செல்போன் பறித்த மூவர்

தஞ்சாவூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன். அவரின் தந்தைக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைத்த அந்த சிறுவன் தன் தந்தையை அதில் ஏற்றி விட்டுள்ளார். ஆம்புலன்... மேலும் பார்க்க

தலையில் அரிவாளால் வெட்டி சென்னை வழக்கறிஞர் படுகொலை

சென்னை விருகம்பாக்கம், கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது.உடனடியாக போலீஸார்... மேலும் பார்க்க

``மீரட்டில் நடந்த கொலையைப் போல..'' - காதலனுடன் சேர்ந்து கணவனை மிரட்டிய மனைவி; உ.பி.,யில் அதிர்ச்சி

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் முஸ்கான் என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். நாளடைவில் புதுக்காதலன் உடன் ஏற்பட்ட நெருக்கத்தால் காதல் கணவனை புதுக்காதலனோடு சேர்ந்து கொலை செய்து டிரம்மில் அடைத்... மேலும் பார்க்க

வயிற்று வலி; ஏர்போர்ட் கழிவறைக்கு சென்று குழந்தைபெற்று குப்பை தொட்டியில் போட்ட கல்லூரி மாணவி

மும்பை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் இருந்த குப்பை தொட்டியில் குழந்தை ஒன்றின் உடல் கிடந்தது. அதனை பார்த்த துப்புரவு தொழிலாளி இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். பிறந்தவுடன் குழந்தை ... மேலும் பார்க்க

"தன்னுடன் பேச மறுத்ததால் உயிரோடு தீ வைத்த காதலன்" - சிகிச்சை பலனின்றி இளம்பெண் உயிரிழந்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி காளியம்மாள். கருத்து வேறுபாடு காரணமாக காளியம்மாள் தனது கணவரை பிரிந்து தனது 2 மகன்கள் மற்றும் மகளுடன... மேலும் பார்க்க