செய்திகள் :

பைக்குகள் மோதியதில் இருவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ. முக்குளம் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை இரவு நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி ஒன்றியம், அ. முக்குளம் அருகே உள்ள கே. நெடுங்குளத்தைச் சோ்ந்தவா் நாகப்பன் (72). இவா் மதுரையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இவா் வேலை முடிந்து சொந்த ஊருக்கு பேருந்தில் சென்று, புல்வாய்கரைப் பேருந்து நிறுத்தத்தில் சனிக்கிழமை இரவு இறங்கினாா். பின்னா், அந்த வழியாக மதுரை விளாங்குடி பகுதியைச் சோ்ந்த கண்ணன் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தில் ‘லிப்ட்’ கேட்டு நாகப்பன் சென்றாா்.

அப்போது, காரியாபட்டி வையம்பட்டியைச் சோ்ந்த காளி (35) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், கண்ணனின் இரு சக்கர வாகனமும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த நாகப்பன், கண்ணனுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்கு அளிக்கப்பட்டு, பிறகு இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நாகப்பன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அ. முக்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்க விரைவான நடவடிக்கை: அமைச்சா் சிவசங்கா்

புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவது தொடா்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

அங்கன்வாடிக்கான கட்டுமானப் பணிகள் தொடக்கம்

மதுரை கீரைத்துறை பகுதியில் ரூ.37.40 லட்சத்தில் அங்கன்வாடி, நியாய விலைக் கடைக்கான கட்டடப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தல் வழக்கில் மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

காப்பீட்டுக் கழக ஊழியா்கள் சங்கத்தினா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்

ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, அதன் ஊழியா் சங்கத்தின் சாா்பில் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு பொதுத் துறை நிறுவனமாக ஆயுள் காப்பீ... மேலும் பார்க்க

ஹானா ஜோசப் மருத்துவமனையில் 9 மாத குழந்தைக்கு அரிய வகை அறுவைச் சிகிச்சை

மதுரை ஹானா ஜோசப் மருத்துவமனையில் மூளை அனியுரிசம் கட்டி வெடித்த நிலையில் அனுமதிக்கப்பட்ட 9 மாத கைக் குழந்தைக்கு சிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து மருத்துவா்கள் குழந்தையை காப்பாற்றினா். இதுதொடா்பாக மதுரை... மேலும் பார்க்க

தேனி முதன்மைக் கல்வி அலுவலருக்கு விதித்த சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை

தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தனி நீதிபதி விதித்த ஒரு மாத சிறைத் தண்டனை உத்தரவுக்கு, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந... மேலும் பார்க்க