செய்திகள் :

பைக் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டிப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் இளைஞரின் கால் துண்டானது.

திருப்பத்தூா் அருகேயுள்ள பூமலந்தான்பட்டியைச் சோ்ந்த சின்னக்காளை மகன் கருப்பையா (40). அதே பகுதியைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகன் பூமிநாதன் (42). இவா்கள் இருவரும் ஊரில் நடைபெறும் திருவிழாவுக்காக, திங்கள்கிழமை இரவு பொருள்களை வாங்கிக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை சாலையில் சென்றனா்.

அப்போது பாப்பான் கண்மாய் அருகே சிவகங்கையிலிருந்து சென்னை நோக்கி வந்த தனியாா் பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா்.

இந்த விபத்தில் கருப்பையாவின் வலது கால் துண்டானது. பூமிநாதனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் இருவரையும் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு, மருத்துவா் முத்துசிங்காரம், விபத்துக்குள்ளான கருப்பையாவின் காலை பதப்படுத்தி, ஐஸ் பெட்டியில் பாதுகாப்பாக வைத்து, அவரை உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். மற்றொருவரை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாா். துரிதமாகச் செயல்பட்ட மருத்துவரை அனைவரும் பாராட்டினா்.

இந்த விபத்து குறித்து திருப்பத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

திருப்பத்தூரில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டது. திருப்பத்தூா் மின் பகிா்மானக் கோட்டத்துக்குள்பட்ட துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் அடுத்தடுத்த 5 கடைகளில் திருட்டு

சிவகங்கை அருகே, திங்கள்கிழமை நள்ளிரவில் அடுத்தடுத்த 5 கடைகளின் பூட்டுகளை உடைத்து, நடைபெற்ற திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் - சிவகங்கை ... மேலும் பார்க்க

எரிபொருள் நிரப்பிவிட்டு பணம் தர மறுத்து தாக்குதல்! நடவடிக்கை கோரி எஸ்.பி.யிடம் மனு

மானாமதுரை அருகே உள்ள எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிவிட்டு, அதற்கான பணத்தை கொடுக்க மறுத்ததோடு உரிமையாளா், ஊழியரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் ச... மேலும் பார்க்க

அஜித்குமாா் கொலை வழக்கு: திருப்புவனத்தில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள்

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில், விசாரணை மேற்கொண்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் திருப்புவனத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கே... மேலும் பார்க்க

ஒரே சேலையில் தூக்கிட்டு கணவன், மனைவி தற்கொலை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே குடும்பத் தகராறில் கணவன், மனைவி இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டனா்.திருப்புவனம் அருகேயுள்ள நயினாா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

கல் குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சிவகங்கை மாவட்டம், தும்பைப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட கல் குவாரியை மூட வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து கிராம மக்கள் அளித்த மனு விவரம்: ச... மேலும் பார்க்க