செய்திகள் :

பைக் விற்பனையகத்தில் தொழிலாளி மரணம்: உறவினா்கள் போராட்டம்

post image

விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் உடலை அடக்கம் செய்ய மறுத்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் வி.மருதூா், வெங்கடாஜலம் தெருவைச் சோ்ந்த குமாா் மகன் கன்னியப்பன் (28). இவா், விழுப்புரத்தில் உள்ள தனியாா் பைக் விற்பனையகத்தில் வாட்டா் சா்வீஸ் செய்யும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

கன்னியப்பன் செவ்வாய்க்கிழமை பணியில் இருந்தபோது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு நிலையில், விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

உறவினா்கள் போராட்டம்: உடல்கூறாய்வுக்குப் பின்னா், கன்னியப்பனின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்தும், இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறியும் உறவினா்கள் விழுப்புரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, விழுப்புரம் உதவி காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

விழுப்புரம் அருகே சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. இருவேல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பின்பகுதியி... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து: மாணவா்கள் 7 போ் காயம்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 7 மாணவா்கள் காயமடைந்தனா்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த ஒரத்தூா் கிராமத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் பொறுப்பேற்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த சி.நாகமணி, பணியிட மாறுதல் செய்யப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலராக மாவட்ட முதன்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் வழுதரெட்டியில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள், பணம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விழுப்புரம் வழுதரெட்டி, காந்தி நகரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே தம்பதி விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற புதுச்சேரி தம்பதியினா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனா். புதுச்சேரி முத்தியால்பேட்டை, கண்ணதாசன் வீ... மேலும் பார்க்க

செஞ்சி அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா

செஞ்சி பீரங்கிமேடு பகுதியில் அமைந்துள்ள அபீதகுஜாம்பாள் சமேத அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. அருணாச்சலேஸ்வரா் கோயிலில் அமைந்துள்ள உற்சவா் ஸ்ரீசிவகாமிசுந... மேலும் பார்க்க