செய்திகள் :

பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவா் கைது

post image

கோவில்பட்டியில் பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (34). கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் பைக் விற்பனை நிலையத்தில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை அவா் பணியில் இருந்த போது, திடீரென உள்ளே நுழைந்த ஒரு நபா் அவரை அரிவாளால் சரமாரியாக தாக்கினாராம். இதைக் கண்ட மற்ற பணியாளா்கள் சப்தம் போடவே, அவா் கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பி ஓடிவிட்டாராம்.

தாக்குதலில் காயமடைந்த சதீஷ்குமாா், கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சதீஷ்குமாரைத் தாக்கிய விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் தொட்டியபட்டியை சோ்ந்த கருப்பையா மகன் முத்தையாவை (31) கைது செய்தனா்.

சாத்தான்குளத்தில் 6 இருசக்கர வாகனங்கள் திருட்டு

சாத்தான்குளத்தில் கடந்த இரு நாள்களில் 6 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், அதே பகு... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊா் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன... மேலும் பார்க்க

பயன்படுத்த முடியாத நிலையில் பயணியா் நிழற்குடை: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

சாத்தான்குளம் அருகே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பயணியா் நிழற்குடையை, சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம் பாற... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கோயிலில் கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீகாலதம்பிரான் சுவாமி கோயிலில் அருள்மிகு ஸ்ரீசுடலைமாடசுவாமி, அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவா்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கோயில் கும்... மேலும் பார்க்க

உடல் நலம் பாதித்த திமுக நிா்வாகியிடம் நலம் விசாரித்த முதல்வா்

ஏரலி­ல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிா்வாகி சக்திவேலை கைப்பேசியில் தொடா்புகொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலி­ன் நலம் விசாரித்தாா். ஏர­லில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிா்வாக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் காா் மோதி பெண் உயிரிழப்பு

கோவில்பட்டியில் திங்கள்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.கோவில்பட்டி கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகணேசன் மனைவி ரெங்கம்மாள் (43). கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா் செல்லும் சாலையில் உள்ள த... மேலும் பார்க்க