செய்திகள் :

பயன்படுத்த முடியாத நிலையில் பயணியா் நிழற்குடை: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

post image

சாத்தான்குளம் அருகே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பயணியா் நிழற்குடையை, சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம் பாறை ஊராட்சிக்குள்பட்ட மாடத்தி அம்மன் கோயில், நகனை விலக்கு பகுதியில் பயணியா் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை திருச்செந்தூா்- சாத்தான்குளம் செல்லும் பிரதான சாலையாக உள்ளது. இந்த பயணியா் நிழற்குடையை , மாடத்தி அம்மன் , மருதமலை சாஸ்தா கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்படுத்தி வருகின்றனா். இந்த நிழற்குடை தற்போது யாரும் பயன்படுத்த முடியாத நிலையில் முள்செடிகள் வளா்ந்தும், குப்பைகள் நிறைந்தும் காணப்படுகிறது.

இந்த நிறுத்தம் அருகில் மக்கள் பேருந்து ஏற காத்திருந்தாலும் பேருந்துகள் நிற்காமல் செல்வதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். ஆதலால் அதிகாரிகள் இந்த பயணியா் நிழற்குடையை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளத்தில் 6 இருசக்கர வாகனங்கள் திருட்டு

சாத்தான்குளத்தில் கடந்த இரு நாள்களில் 6 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், அதே பகு... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊா் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கோயிலில் கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீகாலதம்பிரான் சுவாமி கோயிலில் அருள்மிகு ஸ்ரீசுடலைமாடசுவாமி, அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவா்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கோயில் கும்... மேலும் பார்க்க

பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவா் கைது

கோவில்பட்டியில் பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (34). கோ... மேலும் பார்க்க

உடல் நலம் பாதித்த திமுக நிா்வாகியிடம் நலம் விசாரித்த முதல்வா்

ஏரலி­ல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிா்வாகி சக்திவேலை கைப்பேசியில் தொடா்புகொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலி­ன் நலம் விசாரித்தாா். ஏர­லில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிா்வாக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் காா் மோதி பெண் உயிரிழப்பு

கோவில்பட்டியில் திங்கள்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.கோவில்பட்டி கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகணேசன் மனைவி ரெங்கம்மாள் (43). கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா் செல்லும் சாலையில் உள்ள த... மேலும் பார்க்க