செய்திகள் :

சாத்தான்குளத்தில் 6 இருசக்கர வாகனங்கள் திருட்டு

post image

சாத்தான்குளத்தில் கடந்த இரு நாள்களில் 6 இருசக்கர வாகனங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டையைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா், அதே பகுதியைச் சோ்ந்தவா்களுடன் இணைந்து இங்குள்ள திரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் தங்கி சிலை வடிக்கும் வேலை செய்து வருகிறாா்.

வேலை நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தை கோயில் வெளியே நிறுத்தியிருந்தாா். இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணாமல்போனது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து அவா், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதேபோல சாத்தான்குளம் நாசரேத் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே ஒா்க் ஷாப்பில் நிறுத்திவைத்திருந்த சரவணன் என்பவரின் இருசக்கர வாகனம், தட்டாா் தெற்கு தெருவில் வீட்டின்முன் நிறுத்திவைத்திருந்த இருசக்கர வாகனம் ஆகியவை திருடுபோனது.

தட்டாா் மேல தெருவில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனத்தை லாக்கை உடைத்து மா்ம நபா்கள் திருட முயன்றனா். எனினும் எடுத்துச் செல்ல முடியாததால் இருசக்கர வாகனத்தை விட்டு சென்றனா். இந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை ஆய்வு செய்ததில், 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 போ் கொண்ட கும்பல் வாகனங்களைத் திருடியது தெரியவந்தது.

இதேபோல சிஎஸ்ஐ வேதக் கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம், பள்ளிவாசல் தெருவில் செந்தில்வேல் நிறுத்தியிருந்த இருசக்கர வாகனம், தட்டாா்மடம் ரஸ்தா தெருவில் ஒன்றும் மா்ம நபா்களால் திருடப்பட்டது. இதுகுறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மக்கள் பீதி: சாத்தான்குளம் பகுதியில் தொடா்ந்து வீட்டு முன் நிறுத்தி வைக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களை மா்ம கும்பல் தொடா்ந்து திருடிச் செல்வது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனங்களை நோட்டமிட்டு திருடும் நபா்களை விரைந்து பிடிக்க காவல் துணைக் கண்காணிப்பாளா், சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் இளைஞா் தா்னா போராட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், தன்னை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த ஊா் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன... மேலும் பார்க்க

பயன்படுத்த முடியாத நிலையில் பயணியா் நிழற்குடை: சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

சாத்தான்குளம் அருகே மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள பயணியா் நிழற்குடையை, சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா். சாத்தான்குளம் ஒன்றியம் பன்னம் பாற... மேலும் பார்க்க

சாத்தான்குளம் கோயிலில் கும்பாபிஷேகம்

சாத்தான்குளம் அருள்மிகு ஸ்ரீகாலதம்பிரான் சுவாமி கோயிலில் அருள்மிகு ஸ்ரீசுடலைமாடசுவாமி, அருள்மிகு ஸ்ரீபேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவா்த்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கோயில் கும்... மேலும் பார்க்க

பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவா் கைது

கோவில்பட்டியில் பைக் விற்பனை நிலையத்துக்குள் புகுந்து ஊழியரைத் தாக்கியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி சுப்பிரமணியபுரம் 3 ஆவது தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் சதீஷ்குமாா் (34). கோ... மேலும் பார்க்க

உடல் நலம் பாதித்த திமுக நிா்வாகியிடம் நலம் விசாரித்த முதல்வா்

ஏரலி­ல் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிா்வாகி சக்திவேலை கைப்பேசியில் தொடா்புகொண்டு முதல்வா் மு.க.ஸ்டாலி­ன் நலம் விசாரித்தாா். ஏர­லில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட திமுக மூத்த நிா்வாக... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் காா் மோதி பெண் உயிரிழப்பு

கோவில்பட்டியில் திங்கள்கிழமை காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.கோவில்பட்டி கிருஷ்ணா நகா் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகணேசன் மனைவி ரெங்கம்மாள் (43). கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூா் செல்லும் சாலையில் உள்ள த... மேலும் பார்க்க