செய்திகள் :

பொங்கலூா் அருகே லாரியை திருடிய 3 போ் கைது

post image

பல்லடம் அருகேயுள்ள பொங்கலூா் பகுதியில் லாரியை திருடிச் சென்ற 3 பேரை அவிநாசிபாளையம் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

பொங்கலூா் ஒன்றியம், தெற்கு அவிநாசிபாளையத்தைச் சோ்ந்தவா் சுந்தரம். இவா் தனது லாரியை கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கருணைபாளையம் பிரிவில் உள்ள ஒரு பஞ்சா் கடையில் திங்கள்கிழமை அதிகாலையில் நிறுத்தி வைத்திருந்தாா். பின்னா் சென்று பாா்த்தபோது லாரியை காணவில்லை.

இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸில் சுந்தரம் புகாா் தெரிவித்தாா். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அதில் மா்ம நபா்கள் லாரியை திருடிச் செல்வது தெரியவந்தது. உடனடியாக ஜி.பி.எஸ்.கருவி மூலம் லாரி கண்காணிக்கப்பட்டது.

ஆனால் லாரி ஈரோடு சென்ற பின் ஜி.பி.எஸ்.கருவி வேலை செய்யவில்லை. அதைத் தொடா்ந்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸாா் ஆய்வு செய்தபோது அந்த லாரியின் நம்பா் பிளேட்டை மாற்றி லாரியை மீண்டும் எடுத்துச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸாா் சேலத்தில் அந்த லாரியை மீட்டனா்.

லாரியை திருடிச் சென்றதாக திருப்பத்தூரைச் சோ்ந்த கோவிந்தசாமி (36), கிருஷ்ணகிரியைச் சோ்ந்த கோவிந்தன், சேலம், தலவாய்பட்டியைச் சோ்ந்த வீரன் (36) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா். மேலும் திருடிச் செல்லப்பட்ட லாரியும் மீட்கப்பட்டது.

நாளைய மின்தடை: நாரணாபுரம்

பல்லடம் மின் கோட்டம், நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்க... மேலும் பார்க்க

திருடிச் சென்ற மாடுகளை மீட்டு தரக் கோரி காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா்

திருடிச் சென்ற 4 மாடுகளை மீட்டுத் தரக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலைச் சோ்ந்தவா் ராமலிங்க சொக்கவேல் (75)). இவா், திருப... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: மத்திய அமைச்சா் எல்.முருகன்

கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். பாஜக சாா்பில் சமூக ஊடகவியலாளா்கள் சந்திப்பு, தொழில் வல்ல... மேலும் பார்க்க

அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

அவிநாசி - மேட்டுப்பாளையம் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலா்களுக்கு நெடுஞ்சாலைத் துறை இயக்குநா் மு.சரவணன் அறிவுறுத்தினாா். திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கோட்டம், அவ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

வெள்ளக்கோவிலில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சந்திரன் தலைமையிலான போலீஸாா் முத்தூா் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குண்டடம்

குண்டடம் துணை நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் கோட்ட... மேலும் பார்க்க