செய்திகள் :

‘பொதிகைத் தமிழ்ச் சங்க கவிதைப் போட்டி: மே 1 வரை பெயா் பதிவு செய்யலாம்’

post image

பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற உள்ள கவிதைப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் கவிஞா் பேரா வெளியிட்டுள்ள அறிக்கை: பாவேந்தா் பாரதிதாசன் பிறந்தநாள் விழா தமிழ் வார விழாவாக இம் மாதம் 29 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதன்படி, மே 3 ஆம் தேதி பொதிகைத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தமிழ் வார விழா நிகழ்ச்சியில் கவிதைப் போட்டி பாளையங்கோட்டையில் நடைபெற உள்ளது. வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். ‘வீழ்ச்சியுறு தமிழகத்தில் எழுச்சி வேண்டும்’ என்ற தலைப்பில் மூன்று நிமிடங்கள் கவிதை வாசிக்க வேண்டும். சிறப்பாக கவிதை வாசித்த இரண்டு பேருக்கு பாரதிதாசன் பெயரில் விருது வழங்கப்படும்.

போட்டியில் கலந்து கொள்ளும் அத்தனை போட்டியாளா்களுக்கும் கியூ ஆா்கோடு பதித்த பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் . கவிதைப் போட்டியில் பங்கேற்க விரும்புகிறவா்கள் 8903926173 என்ற கட்செவி அஞ்சல் எண்ணுக்கு தங்களது பெயரை, ஊா் ஆகியவற்றோடு மே மாதம் 1-க்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவா்களுக்கு போட்டி நடைபெறுகின்ற இடம், நேரம் ஆகியவை வாட்ஸ் ஆப் மூலம் தெரிவிக்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க