செய்திகள் :

பொது வேலைநிறுத்தம்: பெ.சண்முகம் வேண்டுகோள்

post image

சென்னை: பொதுவேலைநிறுத்தத்தை தமிழகத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்துறை சம்மேளனங்கள் இணைந்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுவேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன.

கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கொள்கைகளை அமலாக்கி வருகிறது.

இதை எதிா்த்து தொழிலாளா் போராட்டங்கள் தொழில்வாரியாகவும், தனித்தனியாகவும் நடைபெற்றாலும், அனைத்து தொழிலாளா்களும் கூட்டாக இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன.

இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தம் நடைபெறும் நாளன்று, விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மறியல் போராட்டங்களும் நடத்தவுள்ளன.

எனவே, இந்த பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் தொழிலாளா்கள் வெற்றி பெறச்செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் பெ.சண்முகம்.

இன்று பொது வேலைநிறுத்தம்: பணிக்கு வராவிட்டால் ஊதியம் கிடையாது- அரசு ஊழியா்களுக்கு தலைமைச் செயலா் எச்சரிக்கை

அகில இந்திய அளவிலான பொது வேலைநிறுத்தத்தையொட்டி, நன்னடத்தை விதிகளை மீறி அனுமதியின்றி விடுப்பு எடுத்து புதன்கிழமை (ஜூலை 9) பணிக்கு வராமல் இருக்கும் அரசு ஊழியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: செவிலியா் சங்கம் ஆதரவு

நாடு முழுவதும் புதன்கிழமை (ஜூலை 9) நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் ஆதரவு அளித்துள்ளது. இதுதொடா்பாக அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: பொது வேலைநிற... மேலும் பார்க்க

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ... மேலும் பார்க்க

மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா். இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க