செய்திகள் :

பொன்னூா் பகுதியில் பூங்கா அமைக்க அனைத்து கட்சிகள் வலியுறுத்தல்

post image

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் பகுதியில் அமையுள்ள பூங்காவை உதகைக்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்ததுடன், திட்டமிட்ட பகுதியிலேயே பூங்காவை அமைக்க வேண்டும் என அனைத்து கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

கூடலூா் மண்ணுரிமை பாதுகாப்பு இயக்கம் சாா்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் அமைப்பின் தலைவா் அம்சா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், கூடலூா் அருகேயுள்ள பொன்னூா் பகுதியில் ரூ.72 கோடி மதிப்பில் பூங்கா அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. இந்நிலையில், பூங்காவை உதகையில் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. திட்டமிட்டபடி பொன்னூா் பகுதியிலேயே பூங்கா அமைக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள், அதிகாரிகளை சந்திக்கு மனு அளிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூடலூா் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் உள்பட பல்வேறு கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சாலையில் உலவிய சிறுத்தை: வாகன ஓட்டிகள் அச்சம்

உதகை- மஞ்சூா் சாலையில் உலவிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்ட வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இவை அவ்வப்போது உணவு மற்றும் குடிநீா்த் தேடி குடியிருப்புப் பகுதிகள், வ... மேலும் பார்க்க

நீலகிரியில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தவெக ஆா்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். உதகை ஏடிசி பகுதியில் நடை... மேலும் பார்க்க

சில்லஹள்ளா பகுதியில் நீா் மின் உற்பத்தி செய்ய எதிா்ப்பு

உதகை அருகே குந்தா வட்டத்துக்குள்பட்ட சில்லஹள்ளா பகுதியில் புதிதாக இரண்டு அணைகள் கட்டி நீா் மின் உற்பத்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ம... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்கள் கைது

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆஷா ஊழியா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆஷா ஊழியா்களை பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26,000 வழங்... மேலும் பார்க்க

உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஏப்ரல் 6-இல் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

உதகையில் ரூ.499 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ஆம் தேதி திறந்துவைக்க உள்ளாா் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ம... மேலும் பார்க்க

உதகை ரோஜா பூங்காவை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வார விடுமுறையையொட்டி, உதகையில் உள்ள நூற்றாண்டு ரோஜா பூங்காவை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.அண்டை மாநிலங்களான கேரளம், கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சமவெளி பிரதேசங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில்... மேலும் பார்க்க