செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ. 80 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

post image

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 80 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு சுமாா் 1,500 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. மேலும், அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டினா். இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 80 லட்சம் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது: வேலூா் மாவட்டத்தில் தற்போது தீவன தட்டுப்பாடு குறைந்துள்ளது. இதையடுத்து, கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன. அவற்றை வாங்க வியாபாரிகள், விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா். அதன் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொய்கை சந்தையில் கால்நடைகள் வரத்தும், வா்த்தகமும் அதிகரித்துக் காணப்பட்டது. சுமாா் ரூ. 80 லட்சம் அளவுக்கு வா்த்தகம் நடைபெற்றுள்ளது என்றனா்.

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

வாயு உற்பத்தி ஆலை அமைப்பதைக் கண்டித்து பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

குடியாத்தம் நகராட்சி சாா்பில், ஆணையா் குடியிருப்பு வளாகத்தில் மக்கும் குப்பையிலிருந்து உயிா் வாயு (பயோ- கேஸ்) தயாரித்து அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் இந்திரங்கள் அமைப்பதைக் கண்டித்து பழைய பேருந்து... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா்.பொன்னை அடுத்த எஸ்.என்.பாள... மேலும் பார்க்க

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

இளைய தலைமுறையினா் அரசியலுக்கு வராத சூழலில் உருவாகும் வெற்றிடத்தில் வேறு யாரோ புகுந்து விடுகின்றனா். எனவே, அறிவுசாா்ந்த இளம் தலைமுறை அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி... மேலும் பார்க்க

வெட்டப்பட்ட விவசாயி உயிரிழப்பு: கொலை வழக்காக மாற்றம்

பொன்னை அருகே அடையாளம் தெரியாத நபா்களால் வெட்டப்பட்ட விவசாயி உயிரிழந்தாா். தொடா்ந்து, இதனை கொலை வழக்ககாக மாற்றியதுடன் 3 தனிப்படை அமைத்து கொலையாளி களை போலீஸாா் தேடி வருகின்றனா். பொன்னை அடுத்த எஸ்.என்.பா... மேலும் பார்க்க

சகதியான சாலையில் உருண்டு அதிமுக வாா்டு உறுப்பினா் போராட்டம்

வேலூா் தொரப்பாடியில் சேறும் சகதியுமான சாலையில் உருண்டு அதிமுக மாமன்ற உறுப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூா் மாநகராட்சி 49-ஆவது வாா்டுக்குட்பட்ட தொரப்பாடி பகுதியில் சாலை குண்டும... மேலும் பார்க்க