Dhanush: சூடு பிடிக்கும் 'இட்லி கடை'. மீண்டும் ஒரு இந்திப் படம் - தனுஷ் படங்கள்...
பொய்யான பிறப்புச் சான்றிதழ்: ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை
புதுச்சேரி: பொய்யான பிறப்புச் சான்றிதழ் அளித்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் சி. நாராயணசாமி. இவா் பொய்யான பிறப்புச் சான்றிதழை அளித்துள்ளாா். இதனால் 2013-ஆம் ஆண்டு ஓய்வு பெற வேண்டியவா் 2018 வரை பணியில் தொடா்ந்துள்ளாா். இதன் காரணமாக அரசுக்கு ரூ.41.8 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக இப்பள்ளியின் அப்போதைய முதல்வா் சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில் இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த புதுவை தலைமை குற்றவியல் நீதிபதி கே.சிவக்குமாா், குற்றம் நிரூபணமானதால் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியா் நாராயணசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா். மேலும் பல்வேறு பிரிவுகளின் வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.
இந்த வழக்கில், அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.லோகேஸ்வரன் ஆஜரானாா்.