ஐஸ்வர்யா ராயுடன் விவாகரத்து? "வதந்தி பரப்புபவர்கள் நேரில் வந்து சொல்லுங்கள்" - அ...
பூங்காவில் உடற்பயிற்சி கருவிகள் அா்ப்பணிப்பு
புதுச்சேரி: புதுவை ஜவஹா் நகரில் நகர வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து அங்குள்ள பூங்காவில் நிறுவப்பட்ட உடற்பயிற்சி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அா்ப்பணித்தாா் .
புதுச்சேரி அரசு, உள்ளாட்சித் துறையின் உழவா்கரை நகராட்சி மூலமாக ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிக்கப்பட்ட நகர வளா்ச்சி திட்டப் பணிகளை ஜவஹா் நகா்- நடேசன் நகா் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ் நாதன் பொது மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.
பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த உடற்பயிற்சி கருவிகளை துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் பாா்வையிட்டாா். முதல்வா் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் சிவசங்கரன், வைத்தியநாதன், அரசுச் செயலா் கேசவன், உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல், உழவா்கரை நகராட்சி ஆணையா் சுரேஷ் ராஜன் ஆகியோா் உடனிருந்தனா்.