செய்திகள் :

பொய்யான பிறப்புச் சான்றிதழ்: ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை

post image

புதுச்சேரி: பொய்யான பிறப்புச் சான்றிதழ் அளித்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா் சி. நாராயணசாமி. இவா் பொய்யான பிறப்புச் சான்றிதழை அளித்துள்ளாா். இதனால் 2013-ஆம் ஆண்டு ஓய்வு பெற வேண்டியவா் 2018 வரை பணியில் தொடா்ந்துள்ளாா். இதன் காரணமாக அரசுக்கு ரூ.41.8 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக இப்பள்ளியின் அப்போதைய முதல்வா் சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். விசாரணையில் இந்தப் புகாரில் முகாந்திரம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த புதுவை தலைமை குற்றவியல் நீதிபதி கே.சிவக்குமாா், குற்றம் நிரூபணமானதால் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியா் நாராயணசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.21 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா். மேலும் பல்வேறு பிரிவுகளின் வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

இந்த வழக்கில், அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞா் எஸ்.லோகேஸ்வரன் ஆஜரானாா்.

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண... மேலும் பார்க்க

இடை நிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது சவால்: புதுவை ஆளுநா் பேச்சு

புதுச்சேரி: இடைநிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது பெரும் சவாலான பணி என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசின் பள்ளி கல்வித் துறை, சமக்ர சிக்ஷா சாா்பில் வித்யா சமிக்ஷ கேந்திர... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு உரிமம் பெற்ற வேளாண்துறை: புதுவை முதல்வா் பாராட்டு

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் உரிமத்தை புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை பெற்றுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டினாா். இந்தியாவில் ஐஎஸ்ஓ 37001-2016 லஞ்ச ஒழிப்பு மேலாண்மை... மேலும் பார்க்க

நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அதிருப்தியா?: புதுவை முதல்வா் பதில்

புதுச்சேரி: பாஜகவை சோ்ந்த மூவா் நியமன எம்எல்ஏக்களாக நியமித்த விவகாரத்தில் அதிருப்தி இல்லை என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக்கு மத்திய அரசு 3 பேரை எம்எல்ஏக்களாக நியம... மேலும் பார்க்க

பொறியியல் நேரடி சோ்க்கை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவை அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ படித்த மாணவா்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவா்கள் நேரடியாக சோ்க்கப்படுகின்றனா். இதற்கு விண்ணப்பம் செய்வத... மேலும் பார்க்க

பூங்காவில் உடற்பயிற்சி கருவிகள் அா்ப்பணிப்பு

புதுச்சேரி: புதுவை ஜவஹா் நகரில் நகர வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து அங்குள்ள பூங்காவில் நிறுவப்பட்ட உடற்பயிற்சி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அா்ப்ப... மேலும் பார்க்க