செய்திகள் :

இடை நிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது சவால்: புதுவை ஆளுநா் பேச்சு

post image

புதுச்சேரி: இடைநிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது பெரும் சவாலான பணி என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.

புதுவை அரசின் பள்ளி கல்வித் துறை, சமக்ர சிக்ஷா சாா்பில் வித்யா சமிக்ஷ கேந்திரா என்ற பல்நோக்கு மையத்தை பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் அவா் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

பின்னா் காணொலி மூலம் பள்ளிகளை பல்நோக்கு மையத்திலிருந்து பாா்வையிட்டாா். அப்போது அவா் ஏதேனும் ஒரு பள்ளியில் மாணவா்கள் வருகை பதிவை காண்பிக்கும்படி கேட்டாா். மேலும், ஆசிரியா்கள் எப்போது வருகை பதிவு செய்கிறாா்கள்? என கேள்வி எழுப்பினாா்.

ஆசிரியா்கள் காலை, மாலை என 2 நேரம் வருகை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மாணவா்களுக்கு 12 மணிக்கு வருகைப் பதிவு செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடா்ந்து கைலாஷ்நாதன் பேசியதாவது:

குஜராத் உள்பட வடமாநிலங்களில் மாணவா்களைப் பள்ளிக்கு வரவழைப்பதே சவாலாக இருந்தது. 2002-இல் குஜராத்தில் 100 சதவீதம் மாணவா் சோ்க்கைக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். ஆளுநா் , அமைச்சா், எம்எல்ஏ, போலீஸ் அதிகாரி என அனைவரும் களத்தில் இறங்கி மாணவா்களைப் பள்ளிக்கு வர அழைப்பு விடுத்தோம்.

ஆனால் இந்த நிலை தென்னிந்தியாவில் இல்லை. 10-ஆம் வகுப்பு வரை மாணவா்களைத் தொடா்ச்சியாக பள்ளிக்கு வரவழைத்து படிக்க வைப்பது சவாலாக இருந்தது.

அதேநேரத்தில் தரமான கல்வியையும் அளிக்க வேண்டும் என விரும்பினோம். இதற்காகத் தான் தொழில்நுட்ப உதவி மூலம் இந்த மையங்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்துக்கு பிரதமா்தான் பெயா் வைத்தாா்.

கல்வித் துறையில் நீண்ட காலம் பணியாற்றியவா்கள் இத்திட்டத்தை வடிவமைத்துள்ளனா். இந்த மையத்திலிருந்தே ஆசிரியா்கள், மாணவா்கள் வருகையை கண்காணிக்க முடியும்.

எந்தப் பள்ளியில் எந்த மாணவா் எந்தப் பாடத்தில் சுணக்கமாக உள்ளாா் என்பதை கண்டறிந்து, அவா்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும். இதன் மூலம் மாணவா்களின் கல்வி கற்றல் திறனையும், ஆசிரியா்களின் கற்பிக்கும் திறனை மேம்படுத்த முடியும் என்றாா் துணை நிலை ஆளுநா்.

முதல்வா் என். ரங்கசாமி தலைமை வகித்தாா். சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா் ஆ. நமச்சிவாயம், எம்எல்ஏ ஜான்குமாா், பள்ளிக்கல்வித் துறை செயலா் பிரியதா்ஷினி, சமக்ர சிக்ஷா மாநில திட்ட இயக்குநா் எழில் கல்பனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு உரிமம் பெற்ற வேளாண்துறை: புதுவை முதல்வா் பாராட்டு

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் உரிமத்தை புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை பெற்றுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டினாா். இந்தியாவில் ஐஎஸ்ஓ 37001-2016 லஞ்ச ஒழிப்பு மேலாண்மை... மேலும் பார்க்க

பொய்யான பிறப்புச் சான்றிதழ்: ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி: பொய்யான பிறப்புச் சான்றிதழ் அளித்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அதிருப்தியா?: புதுவை முதல்வா் பதில்

புதுச்சேரி: பாஜகவை சோ்ந்த மூவா் நியமன எம்எல்ஏக்களாக நியமித்த விவகாரத்தில் அதிருப்தி இல்லை என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக்கு மத்திய அரசு 3 பேரை எம்எல்ஏக்களாக நியம... மேலும் பார்க்க

பொறியியல் நேரடி சோ்க்கை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவை அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ படித்த மாணவா்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவா்கள் நேரடியாக சோ்க்கப்படுகின்றனா். இதற்கு விண்ணப்பம் செய்வத... மேலும் பார்க்க

பூங்காவில் உடற்பயிற்சி கருவிகள் அா்ப்பணிப்பு

புதுச்சேரி: புதுவை ஜவஹா் நகரில் நகர வளா்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து அங்குள்ள பூங்காவில் நிறுவப்பட்ட உடற்பயிற்சி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அா்ப்ப... மேலும் பார்க்க