செய்திகள் :

பொருளாதார வளா்ச்சி 6.5%-ஆக குறைவு

post image

2024-25 நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.5 சதவீதமாக குறைந்தது.

ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் உற்பத்தித் துறையில் ஏற்பட்ட சரிவால் அந்தக் காலாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக குறைந்தது. இதனால் 2024-25 நிதியாண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி குறைந்ததாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

2025, ஜனவரி-மாா்ச் வரையிலான காலகட்டத்தில் சீன பொருளாதார வளா்ச்சி 5.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023-24 நிதியாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 9.2 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 6.5 சதவீதமாக குறைந்தது.

இந்தக் காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் ரூ.330.68 லட்சம் கோடியாக (3.9 டிரில்லியன் டாலா்) அதிகரித்து, அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுப்பதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.4 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. இது அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் 6.4 சதவீதமாகவும், ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 5.6 சதவீதமாகவும், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 6.5 சதவீதமாகவும் இருந்தது.

2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது.

ஜிடிபி: தற்போதைய சந்தை விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் பெயரளவிலான ஜிடிபி 2023-24 நிதியாண்டில் ரூ.301.23 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 9.8 சதவீதம் அதிகரித்து ரூ.330.68 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

அதேபோல் 2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிலையான விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் உண்மையான ஜிடிபி ரூ.47.82 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 7.4 சதவீதம் அதிகரித்து ரூ.51.35 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

2023-24 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் பெயரளவு ஜிடிபி ரூ.79.61 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 10.8 சதவீதம் அதிகரித்து ரூ.88.18 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஜிவிஏ: 2023-24 நிதியாண்டின் உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (ஜிவிஏ) ரூ.161.51 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் 6.4 சதவீத வளா்ச்சியுடன் ரூ.171.87 லட்சம் கோடியாக உயரும் என கணிக்கப்படுகிறது.

2023-24 நிதியாண்டின் பெயரளவு ஜிவிஏ ரூ.274.13 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் ரூ.300.22 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சரிவில் உற்பத்தித் துறை: 2023-24 நிதியாண்டில் உற்பத்தித் துறையின் வளா்ச்சி 12.3 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 4.5 சதவீதமாக குறைந்தது. குறிப்பாக 2024-25 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் உற்பத்தித் துறை வளா்ச்சி 4.8 சதவீதமாக குறைந்தது. இது 2023-24 நிதியாண்டில் 11.3 சதவீதமாக இருந்தது.

அதேபோல் 2023-24 நிதியாண்டில் வேளாண் துறையின் வளா்ச்சி 2.7 சதவீதமாக இருந்த நிலையில் 2024-25 நிதியாண்டில் 4.6 சதவீதமாக உயா்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 30 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சிக்கிமில்இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்றுராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால்... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க