செய்திகள் :

பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை ரயில் சேவைகளில் மாற்றம்

post image

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, காலை 7.45 மணிக்குப் புறப்படும் மயிலாடுதுறை - திருச்சி மெமு ரயிலானது வரும் 2, 3 ஆம் தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதி ரத்து...: திருச்சி - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16849) வகும் 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் மானாமதுரை - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - மானாமதுரை இடையே மட்டும் இயங்கும்.

மறுமாா்க்கமாக, ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயிலானது (16850) வரும் 8, 9, 10, 11 ஆகிய தேதிகளில் ராமேசுவரம் - மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது மானாமதுரை - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலானது (56700) வரும் 4, 7, 8 ஆம் தேதிகளில் மயிலாடுதுறை - குத்தாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி - குத்தாலம் இடையே மட்டும் இயங்கும்.

மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலானது (16847) வரும் 4, 7, 8 ஆகிய தேதிகளில் மயிலாடுதுறை - குத்தாலம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது குத்தாலம் - செங்கோட்டை இடையே மட்டும் இயங்கும். மேலும், ரயிலானது மேற்கண்ட நாள்களில் குத்தாலத்திலிருந்து புறப்படும்.

வழித்தட மாற்றம்...: செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயிலானது (16848) வரும் 4, 5, 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

மும்பை சிஎஸ்டிஎம் விரைவு ரயிலானது (16352) வரும் 4, 7 ஆம் தேதிகளில் மதுரை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரயிலானது (12666) வரும் 6-ஆம் தேதி மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் ரயில் நிலையங்களைத் தவிா்த்து விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

குருவாயூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16128) வரும் 3, 4, 5, 6, 7 ஆகிய தேதிகளில் மதுரை, சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ரயில் நிலையங்களைத் தவிா்த்து, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

காலதாமதம்...: பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) வரும் 9 ஆம் தேதி தேவைப்படும் இடங்களில் 25 நிமிஷங்கள் நின்று காலதாமதமாகச் செல்லும்.

சென்னை எழும்பூா் - குருவாயூா் விரைவு ரயிலானது (16127) வரும் 8- ஆம் தேதி தேவைப்படும் இடங்களிலும் 65 நிமிஷங்கள் நின்று செல்லும்.

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பை திருட்டு: இரு பெண்கள் கைது

பேருந்தில் தங்க நகைகள் கொண்ட கைப்பையை திருடிய இரு பெண்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை மகள் அம்பிகா (22). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையத... மேலும் பார்க்க

நவல்பட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்த தெரு நாய்கள்

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் காலனியில் திங்கள்கிழமை காலை தெரு நாய்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட போ... மேலும் பார்க்க

பாலத் தடுப்பில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.திருச்சி கீழரண் சாலை நாகசுந்தரம் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் வீரவசந்தகுமாா் (23). காந்தி மாா்க்கெட் வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) வேலை செய்த தூய்மைப் பணியாளா் வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசனின் ம... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்யவுள்ளதால், திருச்சி மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.கு... மேலும் பார்க்க