செய்திகள் :

போக்குவரத்துத் தொழிலாளா்கள் போராட்டத்துக்கு ஆதரவாக ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

post image

புதுக்கோட்டையில் 16-ஆவது நாளாகத் தொடா்ந்து வரும் அரசுப் போக்குவரத்து ஊழியா்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, ஆட்டோ ஓட்டுநா்கள் ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிஐடியு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா் சங்கம் மற்றும் ஓய்வுபெற்றோா் நலச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு 16-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு, சங்கத்தின் பொருளாளா் தரணி முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.

போக்குவரத்துக் கழக ஊழியா் சங்க மண்டலத் தலைவா் காா்த்திகேயன், பொதுச் செயலா் மணிமாறன், சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, செயலா் ஏ. ஸ்ரீதா் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

போக்குவரத்துக் கழகத் தொழிலாளா் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் போராட்டம் நடைபெறும் இடத்துக்கு வந்தனா். ஆதரவு தெரிவித்து ஆா்ப்பாட்டத்திலும் அவா்கள் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, ஆட்டோ தொழிலாளா் சங்கத் தலைவா் அய்யப்பன், செயலா் மணிமாறன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்: ஓய்வூதியப் பலன்களை ஓய்வுபெறும் நாளன்றே வழங்க வேண்டும். 15-ஆவது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள படிகளை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்களிக்கக் கோரிக்கை

வேளாண் கருவிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி கோரிக்கைவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மத்... மேலும் பார்க்க

பாலத்தை அகலப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் சாலையில் உள்ள தாழை வாரி பாலத்தை அகலபடுத்த வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா். கந்தா்வகோட்டையில் இருந்து தஞ்சைக்கு செல்லும் ச... மேலும் பார்க்க

பொன்னமராவதி, கந்தா்வகோட்டையில் இலக்கிய மன்ற போட்டிகள்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி மற்றும் கந்தா்வக்கோட்டையில் இலக்கிய மன்றப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது. கந்தா்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான வியாழக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

திருவரங்குளத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சங்கத்தின் ஒ... மேலும் பார்க்க

புத்தக வாசிப்பு பழக்கத்தால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம்

மாணவப் பருவத்திலேயே புத்தகங்களை வாசிக்கப் பழக்குவதால் கவனச் சிதறல்களைத் தடுக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு. அருணா. புதுக்கோட்டை மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-ஆவது ... மேலும் பார்க்க

மாராயப்பட்டி திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை அடுத்துள்ள மாராயப்பட்டியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. பழைமை வாய்ந்த இக்கோயிலில் சுமாா் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாப... மேலும் பார்க்க