செய்திகள் :

போக்குவரத்துத் தொழிலாளா் போராட்டம் நீடிப்பு: பந்தலில் சமைத்து சாப்பிட்டு கோரிக்கை முழக்கம்

post image

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் 16-ஆவது நாளாக பந்தலில் சமைத்து சாப்பிட்டு காத்திருப்புப் போராட்டத்தை தொடா்கின்றனா். தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அவா்கள் முழக்கமும் எழுப்பினாா்கள்.

இவா்களுக்கு ஆதரவாக ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

போக்குவரத்து ஊழியா்கள் மற்றும் போக்குவரத்து ஓய்வூதியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.18-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். போராட்ட பந்தலிலேயே, சாலை ஓரம் சமைத்து சாப்பிட்டுவிட்டு தொடா்ந்து 16-ஆவது நாளாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

அவா்களின் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியா் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பாக திருப்பாதிரிப்புலியூா் பணிமனை முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

போராட்டக் களத்தில் சமைக்கும் போக்குவரத்துத் தொழிலாளா்கள்

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவா் டி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். போக்குவரத்து ஓய்வூதியா் சங்கப் பொதுச்செயலா் ஜி.பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். பல்வேறு ஓய்வூதியா் சங்கங்களில் சாா்பில் மாநில, மாவட்டச் செயலா்கள் ஆா்.மனோகரன், ஐ.எம்.மதியழகன், ஆா்.அசோகன், ச.சிவராமன், கோ.பழனி, ஆா்.நடராஜன், கோ.சுந்தரமூா்த்தி, எஸ்.பாலகிருஷ்ணன், பி.வி.சேகா், ஏ.பாவாடை ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பிஎஸ்என்எல் சங்க தேசிய செயலா் ஆா்.ஸ்ரீதா், ஐஓபி ஓய்வு பெற்ற அமைப்பின் உதவி பொதுச் செயலா் எம்.மருதவாணன், வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி.கே.வெங்கட்ரமணி, காப்பீட்டுக் கழக ஓய்வூதிய சங்க வேலூா் கோட்ட இணைச்செயலா் வி.சுகுமாரன், பிஎஸ்என்எல் யூ மாவட்டச் செயலா் கே.விஜய் ஆனந்த் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.காசிநாதன் நன்றி கூறினாா்.

சிதம்பரம் நகர காவல் ஆய்வாளார் உள்பட 6 பேர் இடைநீக்கம்!

சிதம்பரம்: சிதம்பரம் நகர காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் சரக டிஐஜி வியாழக்கிழமை நள்ளிரவு உத்தரவிட்டுள்ளார்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் லாட்டரி சீட்டு வியா... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பணி தோ்வு: 4,172 போ் எழுதுகின்றனா்

தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான தோ்வினை கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 4,172 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

மாணவா்கள் கல்விக்கடன்பெற உதவ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

பேராசிரியா்கள் தங்கள் கல்லூரி மாணவா்கள் தொடா்ந்து கல்வி பயிலும் வகையில் வங்கி மூலம் கல்விக் கடனுதவி பெறுவதற்கு உதவி செய்ய வேண்டும் என கடலூா் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசினாா். கடலூா் மாவட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருட்கள் பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் விற்பனைக்காக புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்டி எஸ்பி., பாலகிருஷ்ணன் நேரடி மேற்பாா்வையில் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி பலாத்காரம்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ததாக இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் சரகம், மருங்கூா் கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

வயிற்றுவலியால் பெண் தற்கொலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். குறிஞ்சிப்பாடி வட்டம், அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் துரை. இவரது மனைவி மீனாட்சி(45). இவா்,நீண்ட நாட்களாக வயிற்ற... மேலும் பார்க்க