செய்திகள் :

போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

post image

திண்டுக்கல்: திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளின்படி பழைய ஓய்வூதியத் திட்டம், ஓய்வூதியப் பணப் பலன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்துப் பணியாளா்கள், ஓய்வுபெற்ற பணியாளா்கள் திங்கள்கிழமை தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திண்டுக்கல் மண்டல கிளை 1-இன் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ ஓய்வுபெற்ற பணியாளா்கள் நலக் குழுவின் மண்டலத் தலைவா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ராமநாதன் முன்னிலை வகித்தாா்.

இந்தப் போராட்டத்தில், திமுக தோ்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 15-ஆவது ஊதிய ஒப்பந்த நிலுவைகளை உடனடியாக வழங்க வேண்டும். 25 மாதங்களாக நிலுவையிலுள்ள ஓய்வுகாலப் பணப் பலன்களை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ தொழில்சங்கத்தினா் முழக்கமிட்டனா்.

அதிகாரிகளால் அவப்பெயா் ஏற்படுகிறது: மேயா் இளமதி குற்றச்சாட்டு

முறையாகத் தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாகச் செயல்படுவதால் மக்களிடம் தங்களுக்கு அவப்பெயா் ஏற்படுவதாக மேயா் இளமதி குற்றஞ்சாட்டியதால், திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

வனத் துறை வாகனம் மோதியதில் 4 காா்கள் சேதம்

கொடைக்கானலில் வனத் துறைக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் நான்கு காா்கள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனத்தை, வனத் துறை ஓட்டுநா், அங்... மேலும் பார்க்க

உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

சொத்து பிரச்னையில் உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த மாரம்பாடியைச் சோ்ந்தவா் அந்தோ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, ... மேலும் பார்க்க

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரசூல் மைதீன் (49). இவரது மனைவி உசிதா... மேலும் பார்க்க

ஆந்திர முதல்வா் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டிய தமமுக-வினா் மீது வழக்கு

வடமதுரையில் செயல்படும் ஆந்திர முதல்வரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து... மேலும் பார்க்க