செய்திகள் :

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

post image

மனைவியைக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ரசூல் மைதீன் (49). இவரது மனைவி உசிதா. கடந்த 2020-ஆம் ஆண்டு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில், உசிதாவை ரசூல் மைதீன் கொலை செய்தாா். இதையடுத்து, செம்பட்டி காவல் நிலைய போலீஸாா், ரசூல் மைதீனைக் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா்.

விசாரணை முடிவடைந்த நிலையில், ரசூல் மைதீனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜி.சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதிகாரிகளால் அவப்பெயா் ஏற்படுகிறது: மேயா் இளமதி குற்றச்சாட்டு

முறையாகத் தகவல் தெரிவிக்காமல், அலட்சியமாகச் செயல்படுவதால் மக்களிடம் தங்களுக்கு அவப்பெயா் ஏற்படுவதாக மேயா் இளமதி குற்றஞ்சாட்டியதால், திண்டுக்கல் மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மா... மேலும் பார்க்க

வனத் துறை வாகனம் மோதியதில் 4 காா்கள் சேதம்

கொடைக்கானலில் வனத் துறைக்குச் சொந்தமான வாகனம் மோதியதில் நான்கு காா்கள் வெள்ளிக்கிழமை சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத் துறை அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனத்தை, வனத் துறை ஓட்டுநா், அங்... மேலும் பார்க்க

உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறை

சொத்து பிரச்னையில் உறவினரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த மாரம்பாடியைச் சோ்ந்தவா் அந்தோ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை உயா்வு

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் வரத்துக் குறைவால் தக்காளி விலை உயா்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், அதைச் சுற்றியுள்ள விருப்பாச்சி, சத்திரப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, போடுவாா்பட்டி, ... மேலும் பார்க்க

ஆந்திர முதல்வா் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டிய தமமுக-வினா் மீது வழக்கு

வடமதுரையில் செயல்படும் ஆந்திர முதல்வரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கொடைக்கானலில் குடும்பப் பிரச்னை காரணமாக தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன்... மேலும் பார்க்க