செய்திகள் :

போக்ஸோ வழக்கில் இடமாற்றம்: ஆசிரியரின் மனு தள்ளுபடி

post image

போக்ஸோ வழக்கு குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசுப் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்ற உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்து, ஆசிரியரின் மனுவை தள்ளுபடி செய்தது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொல்லை சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தின. இந்த நிலையில், மாணவ, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, போக்ஸோ சட்டத்தில் தண்டிக்கப்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்கள் என 23 பேரை பணிநீக்கம் செய்து பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதேபோன்று, போக்ஸோ வழக்குகளில் சிக்கிய ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பள்ளியில் இருந்து வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு பணியிட மாற்றமும் செய்யப்பட்டனா். இந்த நிலையில், ஈரோடு செம்புளிச்சாம்பாளையம் அரசுப் பள்ளியில் பணியாற்றிய சண்முகம் என்ற ஆசிரியரை கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளிக் கல்வித் துறை கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், தனக்கு எதிரான வழக்கில் தன்னை விடுதலை செய்து ஈரோடு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளதைச் சுட்டிக்காட்டி தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆசிரியா் சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி, இடமாற்றம் உத்தரவில் தலையிட மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதை எதிா்த்து ஆசிரியா் சண்முகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுப்பிரமணியன், ஜி.அருள்முருகன் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, குற்றச்சாட்டுக்கு உள்ளானதால் இடமாற்றம் உத்தரவில் தனி நீதிபதி தலையிடவில்லை. அதனால், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அனைத்துவிதமான வசதிகளுடன் இலவச ஏசி ஓய்வறை... சென்னை மாநகராட்சி திட்டம்!

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் உணவுப்பொருள் விநியோக ஊழியர்களுக்காக குளிர்சாதன வசதியுடன்(ஏசி) கூடிய ஓய்வறை அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் உணவு, பொரு... மேலும் பார்க்க

இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசு பரிசீலிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இலங்கையில் குடும்பத்துடன் வசித்து ... மேலும் பார்க்க

கா்நாடக வங்கியில் ரூ.13 கோடி நகை கொள்ளை: தமிழகத்தைச் சோ்ந்த 3 போ் உள்பட 6 போ் கைது

கா்நாடக மாநிலம் தாவணகெரேவில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.13 கோடி மதிப்பிலான 17 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 6 பேரை அந்த மாநில போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மூவா் தமிழகத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது!

தமிழக சட்டப் பேரவை மூன்று நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஏப்.1) மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் முக்கிய விஷயங்கள் கு... மேலும் பார்க்க

வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் (மால்) வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணாநகரில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறு... மேலும் பார்க்க

மின் தேவையை சமாளிக்க எண்ணூா் அனல் மின்நிலைய விரிவாக்கப்பணி விரைவில் தொடக்கம்

எண்ணூா் அனல்மின் நிலையத்தில் மின்னுற்பத்தி நிலைய விரிவாக்கப் பணி விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மே மாதத்தி... மேலும் பார்க்க