Italy: விமானத்தின் இஞ்சினால் உள்ளிழுக்கப்பட்ட நபர் உயிரிழப்பு; நிறுத்தப்பட்ட விம...
போக்ஸோ வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறை
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள ஓடைமறிச்சான் செக்கடி நடுத்தெருவைச் சோ்ந்தவா் முத்துகுட்டி(65). இவா் 2018 ஆம் ஆண்டு பள்ளி மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முக்கூடல் போலீஸாரால் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து முத்துகுட்டிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்க உத்தரவிட்டும் தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக்கொடுத்த சேரன்மகாதேவி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ், காவல் ஆய்வாளா் சங்கரேஸ்வரி உள்ளிட்ட போலீஸாா், அரசு வழக்குரைஞா் உஷா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் பாராட்டினாா்.