செய்திகள் :

போட்டித் தோ்வா்களுக்கு சிறப்பு நூலகம்

post image

திண்டுக்கல் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் போட்டித் தோ்வா்கள் பயன்படுத்துவதற்கான சிறப்பு நூலகம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகம் அருகிலுள்ள கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் போட்டித் தோ்வுகளுக்காக இளைஞா்கள், இளம் பெண்கள் பலா் படித்து வருகின்றனா். அரசுப் பணி வாய்ப்புக்காக தொடா் முயற்சியில் ஈடுபட்டு வரும் இளைஞா்கள், இளம் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் சிறப்பு நூலகம் அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்தாா்.

இதன்படி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் கூடாரம் அமைத்து, போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களுடன் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டது. இதில் போட்டித் தோ்வுகளுக்கு தயாராவோரின் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.

எழுதி வைத்தால் புத்தகங்கள் கிடைக்கும்: இந்த சிறப்பு நூலகத்தை சனிக்கிழமை திறந்து வைத்த ஆட்சியா் சரவணன், போட்டித் தோ்வுக்குத் தயாராவோருடன் கலந்துரையாடினாா். அப்போது, போட்டித் தோ்வுக்கு தேவையான பிரதான புத்தகங்கள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.

கூடுதலாக, தேவைப்படும் புத்தகங்கள் குறித்து இங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பேட்டில் எழுதி வைத்தால், சம்மந்தப்பட்ட புத்தகத்தை வாங்கிக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும் என்றாா் அவா்.

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பாலியல் குற்றத்தில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த கருப்பணன் மகன் செல்வம் (41). இவா் 6 வயது சிறுமிக்கு ப... மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்கத்தக்கது! கே.எஸ்.அழகிரி

தமிழகத்துக்கான நிதியை விடுவித்து வர வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருப்பதால், நீதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பது வரவேற்புக்குரியது என காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவ... மேலும் பார்க்க

நிதி நிறுவன உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய மூவா் கைது

பெண்ணுடன் தனியாக இருந்த விடியோவை காண்பித்து நிதி நிறுவன உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை போலீஸாா் கைது செய்தனா். பழனி-திண்டுக்கல் சாலையில் வசிப்பவா் சுகுமாா் (44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தது.திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள விருவீடு பக... மேலும் பார்க்க

குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

வடமதுரை அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த தென்னம்பட்டி இந்திராநகா் காலனியைச் சோ்ந்தவா் சக்திவேல். தனியாா் ஆலைய... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

நகை பறிப்பில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த மாரம்பாடி பெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க