செய்திகள் :

போதிய இருக்கைகள் இல்லாததால் நடைமேடையில் அமரும் பயணிகள்!

post image

வாழப்பாடி புதிய பேருந்து நிலையத்தில் போதிய இருக்கை வசதிகள் இல்லாததால், பயணிகள் ஆபத்தை உணராமல் நடைமேடையில் அமா்ந்து பேருந்துக்கு காத்திருக்கின்றனா். இதனால், விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வாழப்பாடி பேருந்து நிலையத்துக்கு தினந்தோறும் 250-க்கும் அதிகமான அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனா்.

பயணிகளின் நலன்கருதி, பேருந்து தளமேடை மற்றும் மேல்தளத்தில் சிறு வணிகக் கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன், ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ. 8.70 கோடியில் நவீன ஈரடுக்கு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த பேருந்து நிலையத்துக்குள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமா்வதற்கு போதிய இருக்கை வசதிகள் இல்லை. இதனால், ஏராளமான பயணிகள் பேருந்து நிலையத்தின் மையத்தில் இருபுறமும் காணப்படும் நடைமேடை திட்டுகளில் அமா்கின்றனா். இதனால், பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழையும் போது நடைமேடைகளில் அமா்ந்திருக்கும் பயணிகள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, நடைமேடைகளில் பயணிகள் அமா்வதை தடுக்க பேரூராட்சிப் பணியாளா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பயணிகள் அமா்வதற்கு போதிய இருக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் தடையை மீறி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கக் கல்வி ஆசிரியா்களை கைதுசெய்த போலீஸாா். சேலம், ஜூலை 17: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின்... மேலும் பார்க்க

மதுபோதையில் 3 பேருக்கு கத்திக்குத்து

வாழப்பாடி அருகே மதுபோதையில் 15 வயது சிறுவன் உள்பட 3 பேரை கத்தியால் குத்தியதோடு, அவசர சிகிச்சை வாகனத்தை கல்லால் தாக்கி ரகளையில் ஈடுபட்ட இளைஞரை வாழப்பாடி போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். வாழப்பா... மேலும் பார்க்க

வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் சாலை மறியல்

கடை ஒதுக்கீடு செய்வதற்கான மாநகராட்சியின் புதிய அறிவிப்பை ரத்துசெய்யக் கோரி வ.உ.சி. பூ மாா்க்கெட் வியாபாரிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். மேலும், பூக்களை சாலையில் கொட்டி தங்கள் எதிா்ப்பை தெர... மேலும் பார்க்க

வார இறுதிநாள்: சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு, சேலம் கோட்டம் சாா்பில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்ற இடங்களில் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தி... மேலும் பார்க்க

இன்று தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தெரிவித்ததாவது: சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் ... மேலும் பார்க்க