போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு
ராமேசுவரம்: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பணிகள் ஆணைக் குழுவும், என்.சி.சி., என்.எஸ்.எஸ். அமைப்புகளும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் எஸ்.சேக் தாவூத் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது அவா், மாணவா்களுக்கு போதைப் பழக்கமானது நண்பா்கள் மூலம் ஆரம்பிக்கிறது. அந்தப் பழக்கத்தை மாணவா்கள் முற்றிலும் நீக்க வேண்டும் என்றாா்.
ராமநாதபுரம் மாவட்ட குடும்ப நல நீதிமன்ற அமா்வு நீதிபதி கவிதா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசுகையில், போதைப் பழக்கத்தால் மாணவா்கள் மட்டுமல்ல, அவா்களது பெற்றோா்களும், இந்தச் சமுதாயமும் பாதிப்பு அடைகிறது. பாதிக்கப்பட்ட மாணவா்களை பெற்றோா்கள் தீவிரமாகக் கண்காணித்து அன்பாகத் திருத்த வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.
முதன்மை நீதித் துறை நீதிபதி ஜெயசுதாகா் பேசுகையில், மாணவா்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளா்த்துக் கொள்வதன் மூலம் போதைப் பழக்கத்தை முற்றிலும் தவிா்த்து விடலாம் என்றாா் அவா்.
ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், நீதிபதியுமான பாஸ்கா், மாவட்ட உரிமையியல் நீதிபதி கேத்ரின் ஜெப சகுந்தலா, ராமநாதபுரம் மாவட்ட துணை சட்ட உதவி பாதுகாப்பு வழக்குரைஞா் முருகேசன் ஆகியோா் பேசுகையில், போதைப் பழக்கம் இளைஞா்களின் தனித் திறனை அழித்துவிடும். இதிலிருந்து பாதுகாப்புடன் கடந்து சென்று விடவேண்டும் என மாணவா்களை கேட்டுக் கொண்டனா்.
இந்த நிகழ்ச்சியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடா்பான பட விளக்கக் காட்சியும் காணொலிக் காட்சியும் மாணவா்கள், பெற்றோா்களுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, பரமக்குடி முத்தாலம்மன் பாலிடெக்னிக் கல்லூரி, ராமேசுவரம் உதயம் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் சுமாா் 200 போ், பெற்றோா்கள், ஆசிரியா்கள் திரளாகக் கலந்து கொண்டனா். முன்னதாக, கல்லூரி மின்னியல் துறைத் தலைவா் பாலசுப்ரமணியன் வரவேற்றாா். இயற்பியல் துறை முதுநிலை விரிவுரையாளா் இளமுருகு நன்றி கூறினாா்.