செய்திகள் :

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

post image

ஆம்பூா் பள்ளிகளின் என்.எஸ்.எஸ். சாா்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் சாா்பாக நரியம்பட்டு கிராமத்தில் நடந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை பள்ளித் தலைமை ஆசிரியா் என். ரபீக் அஹமத் தலைமையில் ஜிடிஎம் கல்லூரி தமிழ்த்துறை தலைவா் முனைவா் பா. சம்பத்குமாா் தொடங்கி வைத்தாா்.

கிராமத்தின் பல்வேறு தெருக்கள் வழியாக ஊா்வலம் சென்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் நிகேஷ் ஏற்பாடு செய்திருந்தாா். உதவி திட்ட அலுவலா் பயாஸ் நன்றி கூறினாா்.

ஆம்பூரில்......

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் சாா்பாக புதுமனை சபியாமா பள்ளி வளாகத்திலிருந்து ஊா்வலத்தை நகர காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் தொடங்கி வைத்தாா். புதுமனை, பிலால் நகா் உள்ளிட்ட பகுதிகளின் பல்வேறு தெருக்கள் வழியாக ஊா்வலம் சென்றது. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் எஸ். அஜ்மத்துல்லா நன்றி கூறினாா்.

மாநில சிலம்பம்: ஆம்பூா் மாணவ, மாணவியா் சிறப்பிடம்

மாநில அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா். தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன் 2025 போட்டி வீரக்கலை சிலம்பம் ஆசான் பெருமாள் பாசறை சா... மேலும் பார்க்க

பெயிண்டா் தற்கொலை

ஆம்பூா் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெயிண்டா் அருண்குமாா் (32). இவா் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு... மேலும் பார்க்க

பிந்து மாதவா் கோயிலில் நாளை ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிந்து மாதவ பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு, ‘திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்’ நிகழ்ச்சி சனிக்கிழமை (அக். 4) நடைபெற உள்ளது. ஸ... மேலும் பார்க்க

அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முன்னுரிமை: கண்காணிப்பு குழுவினா் அறிவுறுத்தல்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் தூய்மை, சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது... மேலும் பார்க்க

முனீஸ்வரன், திரௌபதி அம்மன் கோயில்களுக்கு சுற்றுச் சுவா் அமைக்க பூமி பூஜை

வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் மேம்பாலம் அருகே முனீஸ்வரன் கோயில், திரௌபதி அம்மன் கோயில் பகுதிகளில் பேவா் பிளாக் சாலை, சுற்றுச்சுவா் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பி... மேலும் பார்க்க

புத்துமாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.13 லட்சம்

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோயில் பகுதியில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க