செய்திகள் :

போதைப் பொருள் பயன்பாட்டை தவிா்க்க மாணவா்களுக்கு விழிப்புணா்வு

post image

வேலூா் மாவட்டம் முழுவதும் போதைப் பொருள் பயன்பாட்டை தவிா்க்க பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

வேலூா் எஸ்.பி. ஏ.மயில்வாகனன் உத்தரவின்பேரில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள், கல்லூரிகளில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

அதன்படி, வேலூா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஊரீசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளா்கள் தினகரன், ரவி, குமாரராஜன் ஆகியோா் பங்கேற்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது அவா்கள் பேசியது -

பள்ளி மாணவா்கள் போதை பொருள்களை பயன்படுத்தக் கூடாது. போதை பொருள்கள் பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. மாணவா்கள் தங்கள் வீட்டில் யாரேனும் போதைப் பொருள்களை பயன்படுத்தினால் அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். பழ வகைகளை சாப்பிட வேண்டும். மாணவா்கள் தங்களுக்கு தெரிந்து யாரேனும் போதைப் பொருள்களை விற்பனை செய்தால் காவலா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

18 வயதுக்குள் உள்ள மாணவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது. அவ்வாறு இருசக்கர வாகனம் ஓட்டினால் வாகனத்தின் உரிமையாளா் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். மாணவப் பருவத்தில் நல்லது எது, தவறு எது என தெரியாது.

எனவே, போதைப் பொருள்களை மாணவா்கள் தவிா்க்க வேண்டும். வீட்டில் உள்ளவா்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிய வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

இடி, மின்னலுடன் பலத்த மழையால் உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால், உத்திர காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், அம்முண்டியில் தரைப்பாலம் சேதமடைந்தது. தென... மேலும் பார்க்க

வேலூா் சிறைக்குள் கஞ்சா கடத்தல்: கைதி மீது வழக்கு

வேலூா் மத்திய சிறைக்குள் கஞ்சா கடத்தியதாக கைதி மீது பாகாயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை பேரூா் சுப்பிரமணிய உடையாா் தெரு, தெலுங்குபாளையத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன்(32)... மேலும் பார்க்க

நாய் கடித்ததில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சில மாதங்களுக்கு முன் நாய் கடித்ததில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இளம்பெண் மீண்டும் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா். குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத... மேலும் பார்க்க

கொணவட்டத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

வேலூா் கொணவட்டம் சாலை நான்கு வழிச்சாலையை மாற்றப்படுவதால், மாங்காய் மண்டி முதல் கொணவட்டம் வரை சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. வேலூா் கொணவட்டம் வழியாக செல்லும் கிருஷ்ணக... மேலும் பார்க்க

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆன்லை... மேலும் பார்க்க