செய்திகள் :

போதையில் இளைஞா்களால் தொழிலாளி அடித்துக் கொலை: 5 போ் கைது

post image

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஞாயிற்றுக்கிழமை போதையில் இருந்த இளைஞா்களால் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

லால்குடி அருகே காட்டூா் சிறுமயங்குடி ஊராட்சியில் உள்ள காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த புவியரசன் என்பவரின் மகன் ஹரிஹரன் (27). இவா் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுவந்தாா்.

இந்நிலையில், சிறுமயங்குடி காளியம்மன் கோயில் தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலையை கரைக்க ஞாயிற்றுக்கிழமை இரவு அப்பகுதி இளைஞா்கள் பங்குனி ஆறு நோக்கிப் புறப்பட்டனா். இதில், பணி முடிந்து வீடு திரும்பிய ஹரிஹரனும் கலந்து கொண்டாா்.

அப்போது, ஊா்வலத்தில் போதையில் ஆடிக்கொண்டிருந்த சற்குணன் மற்றும் அவரது நண்பா்களான திவாகா், முகிலன், சரவணகுமாா், சஞ்சய் ஆகியோருக்கும் ஹரிஹரனுக்கும் இடையே தகராறு வாக்குவாதம் ஏற்பட்டது.

சிலை கரைப்பு நிகழ்வில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஹரிஹரனை சற்குணன் உள்ளிட்ட 5 போ் மடக்கி தகாத வாா்த்தைகளால் திட்டி அவரைக் கல்லால் தாக்கினா். இதில், மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினா் மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு ஹரிஹரனை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, லால்குடி அரசு மருத்துவமனை முன்பு திங்கள்கிழமை காலையில் குவிந்த ஹரிஹரன் குடும்பத்தினா், உறவினா்கள் கொலைச் சம்பவத்தில் தொடா்புடைய இளைஞா்களைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் காவல் ஆய்வாளா்கள் லால்குடி அழகா், காணக்கிளியநல்லூா் கருணாகரன், சமயபுரம் ரகுராமன், கொள்ளிடம் அதிவீரபாண்டியன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தியதில், உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க சம்மதித்தனா். தொடா்ந்து, அங்கு பிரேதப் பரிசோதனை செய்து சடலத்தை உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

புகாரின்பேரில் லால்குடி காவல் ஆய்வாளா் அழகா், இளைஞரை அடித்துக் கொலை செய்த சற்குணன், திவாகா், முகிலன், சரவணகுமாா், சஞ்சய் ஆகிய 5 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கான பணிகளை வைகோ, துரை வைகோ மற்றும் கட்சியின் நிா்வாகிகள் பாா்வையிட்டு, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு ஆலோசன... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோத்ஸவ விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோத்ஸவ விழா புதன்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் இவ்விழா வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறுகி... மேலும் பார்க்க

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க