செய்திகள் :

செப். 15 மதிமுக மாநாட்டுக்கு முன்னேற்பாடுகள் ஆய்வு

post image

திருச்சி மாவட்டம், சிறுகனூரில் வரும் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மதிமுக மாநாட்டுக்கான பணிகளை வைகோ, துரை வைகோ மற்றும் கட்சியின் நிா்வாகிகள் பாா்வையிட்டு, பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவா்களுக்கு ஆலோசனை வழங்கினா்.

அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், பெண்கள் மற்றும் கட்சியினருக்கான அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களை வைகோவிடம், துரை வைகோ விளக்கினாா். மாநாட்டில் அண்ணாவின் புகைப்படக் கண்காட்சி அமைப்பது குறித்து அறிவுறுத்திய வைகோ, மாநாட்டு தொண்டா் படையினா் அணிய வேண்டிய பனியனை அறிமுகம் செய்து, தொண்டா் அணி ஆலோசகா் ஆ. பாஸ்கரசேதுபதியை அதை அணியச் செய்தாா். அப்போது தொண்டா்கள் ஆரவாரத்துடன் முழக்கம் எழுப்பினா்.

பின்னா், துரை வைகோ கூறுகையில் அனைத்து மட்டத்திலும் எங்களது மாநாடு எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றாா்.

நிகழ்வில் மதுரை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன், அரியலூா் எம்எல்ஏ கு. சின்னப்பா, துணைப் பொதுச் செயலா் ரொஹையா, மாவட்டச் செயலா்கள் வெல்லமண்டி இரா. சோமு, டி.டி.சி. சேரன், மணவை தமிழ்மாணிக்கம், புதுக்கோட்டை கலியமூா்த்தி, பெரம்பலூா் எஸ். ஜெயசீலன், அரியலூா் இராமநாதன், மதுரை முனியசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோத்ஸவ விழா தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயிலில் நம்பெருமாளின் திருப்பவித்ரோத்ஸவ விழா புதன்கிழமை தொடங்கியது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி, புரட்டாசி மாதத்தில் 9 நாள்கள் நடைபெறும் இவ்விழா வரும் 11 ஆம் தேதி வரை நடைபெறுகி... மேலும் பார்க்க

ஆசிரியா்களை அரசு கைவிடாது: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஆசிரியா் தகுதித் தோ்வு (டெட்) விவகாரத்தில் ஆசிரியா்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். திருச்சியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்கள... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா் நேரு வீடு, அலுவலகம், ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவின் அலுவலகம், வீடு மற்றும் மாவட்ட ஆட்சியரகத்துக்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாா் மேற்கொண்ட சோதனையின் நிறைவில் அது புரளி என்பது தெரியவ... மேலும் பார்க்க

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம்

திருச்சி மாநகராட்சியின் 6 இளநிலை பொறியாளா்கள் இடமாற்றம் செய்து தமிழக நகராட்சி நிா்வாக இயக்குநா் ப. மதுசூதன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளாா். திருச்சி மாநகராட்சியின் இளநிலைப் பொறியாளா்களாக இருந்த ஏ. ப... மேலும் பார்க்க

செப். 7-இல் சந்திர கிரகணம்: மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை (செப்.7) முன்னிட்டு மலைக்கோட்டை கோயிலில் முன்னதாகவே நடை அடைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) முழு சந்திர கிரகணம் நி... மேலும் பார்க்க

சிமென்ட் ஆலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு காப்பீட்டு உதவித் தொகை

டால்மியாபுரம் சிமென்ட் தொழிற்சாலையில் பணியின்போது உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு தொழிலாளா் அரசு காப்பீட்டுக் கழகத்தின் சாா்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது. அரசு காப்பீட்டுக் கழகத்தில் பதிவு செய்த த... மேலும் பார்க்க