செய்திகள் :

போதையில் தகராறு; அண்ணனை கொன்ற தம்பி போலீஸில் சரண் - மதுவால் நடந்த விபரீதம்

post image

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நடுக்காவேரி அரசமர தெருவைச் சேர்ந்த ராஜா இவரது மகன்கள் அஜித்குமார் (27) டிப்ளமோ படித்துள்ளார். ராம்குமார் (25) டூ விலர் மெக்கானிக். ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

அஜித்குமாரின் தாய் விஜயா தனது இளைய மகள் வீட்டில், திருப்பூரில் வசித்து வருகிறார். இந்நிலையில், அஜித்குமார் வேலைக்கு செல்லாமல், தினமும் குடித்து விட்டு, வீட்டிலும் தெருவிலும் தகராறு செய்து வந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட அஜித்குமார்

இது குறித்து அஜித்குமாரை இவரது தம்பி ராம்குமார் பலமுறை கண்டித்து வந்துள்ளார். இதையடுத்து, நேற்று இரவு வழக்கம் போல் அஜித்குமார் குடித்து விட்டு போதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ராம்குமார் அவரிடம் சண்டை போட்டுள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பானது.

இதில் ராம்குமார் தனது அண்ணன் அஜித்குமாரை அடித்து கீழே தள்ளியதில் தலையில் அடிப்பட்டது. அதன் பிறகும் ஆத்திரம் அடங்காமல் வீட்டில் இருந்த ஒயரில் அஜித்குமார் கழுத்தை நெறித்து கொன்றார். பிறகு, இறந்த அண்ணன் அஜித்குமார் உடலை, வீட்டின் பின் புறம் உள்ள செப்டிக் டேங்கில், போட்டு மூடி விட்டு எதுவும் நடக்காதது போல் ராம்குமார் துாங்கி விட்டார்.

தம்பி ராம்குமார்

இதையடுத்து, அண்ணனை கொலை செய்து விட்டதை நினைத்து மனம் வருந்தி அழுதிருக்கிறார். அவருக்கு இதை மறைக்கவும் மனசு வரவில்லை. உடனே, நடுக்காவேரி போலீஸில், சரணடைந்துடன் போலீஸாரிடம் அன்ணனை கொலை செய்து விட்டேன் என்றுள்ளார்.

இதைகேட்ட போலீஸார் அதிர்ந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸ் அஜித்குமார் உடலை மீட்டனர். பின்னர் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். எனக்குனு இருந்த என் அண்ணனை கொலை செய்து விட்டேன் என புலம்பி கொண்டே இருந்துள்ளார். இந்த சம்பவம் திருவையாறு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; பள்ளி மாணவியுடன் லாட்ஜில் தங்கிய இளைஞர் கைதான பின்னணி!

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட பகுதியில் தாத்தா, பாட்டியுடன் வசிக்கும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி, திடீரென மாயமனார். அவரைக் கண்டுபிடித்து தரும்படி மாணவி தரப்பில் ஆவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க

`பேன்ட் அளவு சரியில்லை' - டெய்லரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற இளைஞர்... குமரி `பகீர்'

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, திட்டுவிளை அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(65). இவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் பெண்களுக்கான தையலகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன் தினம... மேலும் பார்க்க

படித்தது பிளஸ் 2; 18 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சை -திருப்பரில் கைது செய்யப்பட்ட போலி மருத்துவர்!

திருப்பூர் முருகம்பாளையம் கிராமத்தில் சூர்யா கிருஷ்ணா நகர் 1-ஆவது வீதியில் ஹிமாலயா பார்மசி என்ற மருந்துக் கடை இயங்கி வருகிறது. ஜோலி அகஸ்டின் என்பவர் இந்த மருந்துக் கடையை நடத்தி வருகிறார். கேரளத்தைச் ச... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: மாயமான ஆட்டிசம் பாதித்த இளைஞர் கொலையா? சித்திரவதை செய்ததா காப்பகம்? அதிர்ச்சி தகவல்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் ‘யுதிரா சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு காப்பகம் செயல்பட்டு வருகிறது. கவிதா, ஷாஜி, கிரி ஆகியோர் அதன் உரிமையாள... மேலும் பார்க்க

'உங்கக் கிட்ட இருக்க கறுப்புப் பணத்துல 1 கோடி வேணும்' - எஸ்.பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் கடிதம்

முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி கோவை சுகுணாபுரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரின் வீட்டுக்கு காளப்பட்டி தபால் நிலையத்தில் 15.5.2025 முத்திரையிடப்பட்ட கடிதம் ஒன்று... மேலும் பார்க்க

சென்னை: ஏஐ மூலம் ஆபாச வீடியோ - மணிப்பூர் இளம் பெண்ணை பழிவாங்க ஆசைப்பட்ட டிரைவர் சிக்கியது எப்படி?

மணிப்பூரைச் சேர்ந்த 19 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2024-ல் சென்னை சூளைமேடு பகுதியில் தங்கியிருந்து சலூன் ஒன்றில் வேலை செய்து வந்தார். அந்தச் சமயத்தில் அவர் பைக் கால்டாக்ஸி மூலம் அடிக்கடி பயணித்திருக... மேலும் பார்க்க