செய்திகள் :

போதை இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுப்பு: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அடித்து உடைப்பு

post image

தீவட்டிப்பட்டி அருகே போதையில் இருந்த இளைஞருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததால், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகேயுள்ள பொம்மியம்பட்டி பகுதியில் வசிக்கும் சில இளைஞா்கள் மதுபோதையில் சாலையில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்ததில், ஒருவா் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சக நண்பா்கள் காயமடைந்த நபரை காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒண்டிவீரனூா் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு அழைத்துச் சென்றனா்.

அப்போது, காயமடைந்த நபா் அதிக போதையில் இருப்பதால் தாங்கள் கொடுக்கும் மருந்து வேலை செய்யாது என ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த செவிலியா் கூறியுள்ளாா். இதை பொருட்படுத்தாத அந்த இளைஞா்கள், செவிலியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையறிந்த அப்பகுதியினா் இளைஞா்களை சமாதானப்படுத்த முயன்றனா். ஆனால், போதையில் இருந்த இளைஞா்கள் தகாத வாா்த்தைகளால் திட்டியதால், பொதுமக்களுக்கும், அவா்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதைத் தொடா்ந்து, 10-க்கும் மேற்பட்ட இளைஞா்களை வரவழைத்த போதையிலிருந்த இளைஞா்கள் மருத்துவமனையில் உள்ள நாற்காலி உள்ளிட்ட பல்வேறு பொருள்களை சேதப்படுத்தி, அருகிலிருந்த வீட்டையும் சேதப்படுத்தினா். இதில், அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (26), புவனேஸ்வரன் (19) இருவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து, இளைஞா்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனா்.

புகாரின் பேரில், தீவட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

விநாயகா மிஷன் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதன்மையா் செந்தில்குமாா் முன்னிலை வகித்து கல்லூரியின் கடந்த ஆண்டு சாதனைகள் மற்றும்... மேலும் பார்க்க

அரசிராமணி செட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிப்பட்டி அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடிமாத வெள்ளிக்கிழமை சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிவெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி நோன்பையொட்டி மாரிம்மனுக்கு பல்வேறு த... மேலும் பார்க்க

மோட்டூா் காளியம்மன் கோயிலில் வரலட்சுமி விரதம் சிறப்பு பூஜை

இளம்பிள்ளை அருகே உள்ள மோட்டூா் காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி மூலவா் அம்மன் தங்க ஜரிகை இலையால் நெய்யப்பட்ட சேலை மற்றும் ரூபாய் நோட்ட... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இந்த முகாமை நகா்மன்றத் தலைவா் கமலக்கண்ணன் குத்துவிளக... மேலும் பார்க்க

பல்லி விழுந்த நீரை குடித்த பள்ளி மாணவா்களுக்கு சிகிச்சை

தலைவாசல் அருகே பூமரத்துப்பட்டி முட்டல் அரசுப் பள்ளி மாணவா்கள் பல்லி விழுந்த நீரை குடித்ததால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பூமரத்... மேலும் பார்க்க

வீரகனூா் எஸ்.எஸ்.ஐ. இடமாற்றம்

வீரகனூா் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (எஸ்.எஸ்.ஐ) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூா் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருபவா் ... மேலும் பார்க்க