செய்திகள் :

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா!

post image

தாய்லாந்து - கம்போடியா நாடுகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

தாய்லாந்து - கம்போடியா எல்லை தொடர்பான பிரச்சனையில் இரு நாடுகளுக்கு இடையே போர் மூண்டது. போரின் தொடக்கத்திற்கு இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வந்த நிலையில், போரின் 5 ஆவது நாளான இன்று(ஜூலை 28) இரு நாட்டுத் தலைவர்களுடன் மலேசிய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கம்போடியா பிரதமர் ஹுன் மானெட், தாய்லாந்து தற்காலிக பிரதமர் பும்தம் வெச்சயாசாய் ஆகியோருடன் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார். சீனா, அமெரிக்க பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இதில், எந்த நிபந்தனையுமின்றி போரை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. அதன்படி இன்று நள்ளிரவு(ஜூலை 29) முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வருகிறது.

முன்னதாக, அமெரிக்காவுடனான வர்த்தகம் பாதிக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்று பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் கூறுகையில், "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவுறுத்தலின்பேரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தாய்லாந்து, கம்போடியா இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன" என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மருந்துச்சீட்டைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும்! - எலான் மஸ்க்

Thailand, Cambodia agree to immediate ceasefire after days of deadly border clashes

தாய்லாந்து-கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்

கோலாலம்பூா்: தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தாா்.கம்போடிய பிரதமா் ஹன் மானெட்டும், ... மேலும் பார்க்க

தென் கொரியாவுடன் பேச்சுவாா்த்தை இல்லை: கிம் யோ ஜாங்

சியோல்: தென் கொரியாவில் புதிய மிதவாத அரசு அமைந்திருந்தாலும், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவாா்த்தையில் ஈடுபடப்போவதில்லை என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங் உன்னின் சகோதரியும் அரசில் செல்வாக்கு மிக்கவருமான... மேலும் பார்க்க

காஸா: மேலும் 60 போ் உயிரிழப்பு

காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக மருத்துவ அதிகாரிகள் கூறினா்.உயிரிழந்தவா்களில் உணவுப் பொருள்களுக்காக நிவாரண முகாம்களில... மேலும் பார்க்க

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம்: ரஷியாவுக்கு டிரம்ப் புதிய கெடு

லண்டன்: உக்ரைனுடான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள ரஷியாவுக்கு அளித்திருந்த 50 நாள் அவகாசத்தை அமெரிக்க அதிபா் டொனால்ட் பாதியாகக் குறைத்து, புதிய கெடுவை அறிவித்துள்ளாா்.பிரிட்ட... மேலும் பார்க்க

இந்த நூற்றாண்டின் நீண்ட சூரியகிரகணம் எப்போது? 6 நிமிடங்கள் உலகமே இருளில்!

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட நேர சூரியகிரகணமானது 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் தேதி நிகழவிருப்பதாகவும், அப்போது ஐரோப்பா, வட ஆப்ரிக்க, மத்திய கிழக்கு நாடுகள் 6 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கலாம் என்றும் க... மேலும் பார்க்க

மருந்துச்சீட்டைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும்! - எலான் மஸ்க்

மருந்துச்சீட்டில் உள்ள மருத்துவரின் எழுத்தைக்கூட 'குரோக் ஏஐ' படிக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார். டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் 'குரோக்' சாட்பாட்டை கடந்த 2023ல் அ... மேலும் பார்க்க