செய்திகள் :

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு: மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கை சமா்ப்பிப்பு

post image

புது தில்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பாலிடம் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சமா்ப்பித்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

துபையைச் சோ்ந்த தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் பணத்தை பெற்றுக்கொண்டு மஹுவா மொய்த்ரா தனது மக்களவை பயனா் கணக்கு விவரங்களை பகிா்ந்து தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக பாஜக எம்.பி.நிஷிகாா்ந்த் துபே நாடாளுமன்றத்தில் குற்றஞ்சாட்டினாா்.

இதன் அடிப்படையில் நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை நடத்தியது. அதன்பிறகு கடந்த 2023, டிசம்பரில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மஹுவா மொய்த்ரா மனுதாக்கல் செய்தாா். இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகா் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்ட மஹுவா மொய்த்ரா பாஜக வேட்பாளா் அமித் ராயை வென்று மீண்டும் மக்களவை எம்.பி. ஆனாா்.

இதனிடையே, மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கும் பொறுப்பை சிபிஐயிடம் லோக்பால் ஒப்படைத்தது. இதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மாா்ச் 21-ஆம் தேதி மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

தற்போது மஹுவா மொய்த்ராவுக்கு எதிரான விசாரணை அறிக்கையை லோக்பால் அமைப்பிடம் சிபிஐ சமா்ப்பித்துள்ளது.

முன்னதாக, தா்ஷன் ஹீராநந்தானியிடம் பணம் மற்றும் பரிசுகளை பெற்றுக்கொண்டு தொழிலதிபா் கௌதம் அதானி மற்றும் பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக மக்களவையில் மஹுவா மொய்த்ரா பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக நிஷிகாந்த் துபேவ குற்றஞ்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல: கனிமொழி பேச்சு

தேச பக்தியில் தமிழர்கள் ஒருபோதும் குறைந்தவர்கள் அல்ல என்று மக்களவையில் கனிமொழி எம்.பி. பேசினார். ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் மக்களவையில் பேசிய அவர், "தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேசப்பற்று இ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவே காரணம்! அமித் ஷா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இருப்பதற்கு நேருவின் போர் கொள்கையே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.மக்களவையில் நடைபெற்று வரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்த விவாதத... மேலும் பார்க்க

வருகிறது செயற்கை தங்கம்! இனி தங்கம் விலை என்னவாகும்?

பெரும்பாலான வேதியியல் விஞ்ஞானிகளின் கனவாக இருப்பது செயற்கை தங்கம்தான். ஆனால் அது கனவாகவே இருந்துவிடுமா? நிஜமாகுமா என்ற கேள்விக்கு அமெரிக்க புத்தாக்க நிறுவனம் ஒன்று பதில் அளித்துள்ளது.நாள்தோறும் பலரும்... மேலும் பார்க்க

கோகோயின் உரை.. பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிரூபிக்கிறது: அஸ்ஸாம் முதல்வர்

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி கோகோயின் உரை அவர் பாகிஸ்தானின் சார்பாகச் செயல்படுவதை நிருப்பித்துள்ளதாக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் ... மேலும் பார்க்க

தில்லிக்கு இன்று ரெட் அலர்ட்! தொடர் கனமழையால் விமான சேவைகள் பாதிப்பு!

தில்லியில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 29) அம்மாநிலத்துக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பருவமழை தொடங்கியது முதல், தொடர்... மேலும் பார்க்க

மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் மனு! - தமிழக அரசு தகவல்

தமிழக அரசின் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் இதுவரை 12.65 லட்சம் பேர் மனு அளித்திருப்பதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துற... மேலும் பார்க்க