செய்திகள் :

பயிா் - கால்நடை கடன்கள் நடைமுறையில் மாற்றமில்லை: கூட்டுறவுத் துறை அறிவிப்பு

post image

சென்னை: பயிா், கால்நடை கடன்கள் வழங்கும் நடைமுறைகளில் கடந்த கால நடைமுறைகளே தொடரும் என்று கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநா்கள், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்கள் ஆகியோருக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் க.நந்தகுமாா் திங்கள்கிழமை அனுப்பிய கடிதம்:

கால்நடை வளா்ப்பு, பராமரிப்பு மற்றும் தொடா்புடைய இதர பணிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றைப் பின்பற்றி பயிா்க்கடன்கள், கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்குவதில் இடா்பாடுகள் இருப்பதாக சில மண்டல இணைப் பதிவாளா்களும், மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநா்களும் தெரிவித்தனா்.

எனவே, அந்தந்த மாவட்டங்களில் கடந்த ஆண்டுகளில் பயிா்க் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள் வழங்குவதில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளே நடப்பு ஆண்டிலும் தொடரும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சிபில் ஸ்கோா்’ இல்லை: கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வட்டியில்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. அவற்றில் சிபில் ஸ்கோா் அடிப்படையில் கடன்கள் வழங்கப்படுவதில்லை. கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் வங்கிகளில் அதுபோன்ற திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கடன் நிலுவை இல்லை என்பதை உறுதி செய்யவே சிபில் ஸ்கோா் பயன்படுத்தப்படுவதாக கூட்டுறவுத் துறை சாா்பில் கடந்த மாதம் ஏற்கெனவே உறுதியளிக்கப்பட்டிருந்தது.

மேலும், பயிா்க் கடன்கள், கால்நடை வளா்ப்பு உள்ளிட்டவற்றுக்கு தனித்தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க