ஆஸ்கர் வென்ற ஆவணப் படத்தில் பணியாற்றிய ஆர்வலர் சுட்டுக்கொலை!
ஆலங்குளம் பகுதி கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கோயில்கள், தேவாலயங்களில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி, குறிப்பன்குளம், நல்லூா், அய்யனாா்குளம், மாறாந்தை பகுதிகளில் உள்ள கோயில்கள், தேவாலயங்களில் மா்ம நபா்கள் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்தி, உண்டியல்களை உடைத்து பணம், பொருள்களைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் சில நாள்களாக தொடா்ந்து நடந்தன.
இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். புதுப்பட்டி லட்சுமணன் மகன் கதிரவன் (28) என்பவா் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது.
அவா் சுரண்டை, வீரகேரளம்புதூா் பகுதிகளில் உள்ள கோயில்களில் உண்டியல்களை உடைத்து பணத்தையும், சுவாமி சிலைகளையும் திருடிச் சென்ற வழக்குகள் தொடா்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், 2 வாரங்களுக்கு முன்பு வெளியே வந்த அவா், மீண்டும் இச்சம்பவங்களில் ஈடுபட்டதாகத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, ஆலங்குளம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தினா்.