செய்திகள் :

"என் தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார்... அந்த வலி எனக்கு புரியும்" - மக்களவையில் பிரியங்கா

post image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நேற்றில் இருந்து பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து இன்று மக்களவையில் பிரியாங்கா காந்தி பேசியதாவது...

"நேற்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் தீவிரவாதம், நாட்டை பாதுகாப்பது, வரலாறு படத்தை எடுப்பது என ஒரு மணி நேரம் பேசினார்.

ஆனால், அவர் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பேசவில்லை. அது, 'எப்படி இந்தச் சம்பவம் நடந்தது' என்பது ஆகும்.

பைசரான் பள்ளத்தாக்கில் ஏன் ஒரு பாதுகாப்பு அதிகாரி கூட இருக்கவில்லை?

குடிமக்களின் பாதுகாப்பு பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பொறுப்பு இல்லையா?

அமித்ஷா
அமித்ஷா

நேரு, இந்திரா காந்தி, என் அம்மா...

இன்று உள்துறை அமைச்சர் நேரு குறித்தும், இந்திரா காந்தி குறித்தும் பேசினார். அவர் என் தாயின் கண்ணீர் குறித்துக்கூட பேசினார்.

ஆனால், அவர் ஏன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்பது குறித்து மட்டும் பதிலளிக்கவில்லை.

என் தாயின் கண்ணீர் குறித்து பேசியதற்கு, நான் பதில் அளிக்க வேண்டும். என்னுடைய தந்தை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டப் போது, என்னுடைய அம்மா கண்ணீர் சிந்தினார். நான் இன்று 26 பேர் குறித்து பேசுகிறேன் என்றால், நான் அவர்களது வலியை உணர்கிறேன் என்பதால் தான்.

ஆனால், அவர் ஏன் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது என்பது குறித்து மட்டும் பதிலளிக்கவில்லை.

பஹல்காம் தாக்குதல்
பஹல்காம் தாக்குதல்

அன்று ஏன் பாதுகாப்பு இல்லை?

இந்த அரசு எப்போதும் கேள்விகளில் இருந்து தப்பிக்க முயல்கிறது. அவர்கள் குடிமக்களிடம் எந்தப் பொறுப்புணர்ச்சியும் கிடையாது.

உண்மை என்னவென்றால், அவர்கள் மனதில் மக்களுக்கு இடம் இல்லை.

அவர்களுக்கு எல்லாமே அரசியலும், பப்ளிசிட்டியும் தான்.

இன்று இங்கே அமர்ந்திருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பு உள்ளது. ஆனால், பஹல்காமில், அந்த நாளில் 26 பேர் அவர்களது குடும்பத்தின் கண்முன்னேயே கொல்லப்பட்டிருக்கின்றனர்.

அந்த நாளில் பைசரான் பள்ளத்தாக்கில் இருந்த எந்த மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

நீங்கள் எத்தனை ஆபரேஷன் நடத்தினாலும், உண்மைக்கு பின்னால் நீங்கள் ஒளிய முடியாது".

நெல்லை ஆணவக் கொலை: `அலட்சியம்; தனிச்சட்ட கோரிக்கை புறக்கணிப்பு...' - திமுக-வைச் சாடும் பா.ரஞ்சித்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஐடி ஊழியர் கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாட்டின் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் பிரமுகர்களும், இய... மேலும் பார்க்க

சூட்டைக் கிளப்பிய பஹல்காம் விவாதம் `டு' மத்திய அரசைக் கண்டித்த ஓபிஎஸ் - Daily Roundup 29-07-2025

``இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தத்ததை செய்ததாக 26 முறை அமெரிக்க அதிபர் தெரிவித்திருக்கிறார். அதிபர் ட்ரம்ப் பொய் சொல்கிறார். அவர் ஒரு பொய்யர் என்று மட்டும் சொல்லுங்கள் பார்க்கலாம்" என நாடாளும... மேலும் பார்க்க

Edappadiயின் செயல் - டென்ஷனான BJP; கடுகடுக்கும் ADMK நிர்வாகிகள்| Off The Record

எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டிருக்கும் சுற்றுப் பயணத்தில் நடந்த அரசியல், குளறுபடிகள், உட்கட்சி அரசியல் குறித்தும் விவரிக்கிறது இந்த Off The Record. மேலும் பார்க்க

Pakistan Chocolate உடன் பதுங்கியிருந்த Terrorists - Intelligence Failure | Imperfect Show 29.7.2025

* ஆபரேஷன் சிந்தூர்: "இந்தியாவை கோழை நாடாக்கியிருக்கிறீர்கள்" - சு.வெங்கடேசன்* அகழாய்வுப் பணிகளுக்கான நிதியில் 94% பிரதமர் பிறந்த வத்நகரில் பயன்படுத்தப்பட்டுள்ளது -சு.வெங்கடேசன்* “பஹல்காம் தாக்குதல் உள... மேலும் பார்க்க

"ஆணவக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க.." - வேல்முருகன் கருத்து!

திருநெல்வேலியில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயது ஐ.டி ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது. கொலையாளி சுர்ஜித்தின் தந்தை-த... மேலும் பார்க்க