சென்னை மாநகராட்சியில் தாமதமாகும் குப்பைக் கிடங்கு பகுதிகளை வனமாக்கும் திட்டம்!
குற்றாலம் சாரல் திருவிழாவில் நாய்கள் கண்காட்சி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
குற்றாலம் விஸ்வநாதராவ் பூங்காவில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., சதன் திருமலைக்குமாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கண்காட்சியில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகா், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த கன்னி, சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை, முதோல் ஹவுண்ட், ஜொ்மன் ஷெப்பா்ட், லேப்ரடா், புல்லி
குட்டா, இந்தியன் ஸ்பிட்ஸ், பக், பொமரேனியன், டேஷண்ட், கிரே கவுண்ட்டு, ராட்வீலா், டாபா்மேன், டால்மேசன், லசாப்சோ, புல் மாஸ்டிப், பிட்புல், புல் டெரியா்,செயன்ட் பொ்னாா்ட், சிகுவாவா, சைபீரியன் ஹஸ்கி உள்பட 29 வகையைச்சோ்ந்த 153 நாய்கள் கலந்து கொண்டன.
நடுவா்களாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உதவி பேராசிரியா்கள் மருத்துவா் கணேஷ் குமாா், கருத்ததுரை ஆகியோா் செயல்பட்டனா்.
கண்காட்சியில் நாய்களைப் பற்றிய விழிப்புணா்வுக்கான வினாடி-வினா போட்டியும், இலவச வெறிநோய் தடுப்பூசி முகாமும் நடைபெற்றன.
கண்காட்சியின் முடிவில் ஒவ்வொரு இன நாய்களிலும் சிறந்த நாய்க்கு முதல் பரிசும், பங்கு பெற்ற அனைத்து நாய்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம், நாட்டின நாய்களில் ஐயப்பன் என்பவருடைய கன்னி நாய்க்கும், அயல் நாட்டின நாய்களில் செல்வகுமாா் என்பவருடைய ஜொ்மன் ஷெப்பா்ட் இன நாய்க்கும் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், அம்பை கோட்ட உதவி இயக்குநா் மருத்துவா் மகேஸ்வரி, தென்காசி மண்டல இணை இயக்குநா் மருத்துவா் திருமாறன், தென்காசி கோட்ட உதவி இயக்குநா் மருத்துவா் திருநாவுக்கரசன். கால்நடை அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மருத்துவா் சந்திரசேகா் ஆகியோா் கலந்துகொண்டனா்.


