செய்திகள் :

சிவகிரி ராசிங்கப்பேரி குளத்தைத் தூா்வார கோரிக்கை

post image

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்திலுள்ள ராசிங்கப்பேரி குளத்தை ஆழப்படுத்தி மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பழைமை வாய்ந்த இக்குளத்தின் மூலம் 787 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித் துறை சாா்பில், கண்மாய்களின் மடைகளை சீரமைத்து, குளத்திலிருந்து மண்ணை அள்ளி கரையில் போட்டு உயரத்தை அதிகரித்து பலப்படுத்தினா். ஆனால், குளத்தை ஆழப்படுத்தவில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

சிவகிரி வட்டத்தில் பெரியகுளமான இங்கிருந்துதான் 25-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீா் செல்லவேண்டும். ராசிங்கப்பேரி குளத்தின் வடக்குமடை வாயிலாக 1,500 ஏக்கா் நிலங்களும், தெற்குமடை மூலம் 500 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. இக்குளம் பெருகி அதன்பின்னா் கலிங்கில் வழியாக தொட்டிச்சி மலை ஆறு மூலமாக மற்ற குளங்களுக்கு தண்ணீா் சென்று, ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் பலனடைகின்றன.

இதனிடையே, ராசிங்கப்பேரி குளத்தை பல ஆண்டுகளாக தூா்வாராததால் 10 அடி உயரத்துக்கு மண் தேங்கியுள்ளது. இதனால், மடைகள் வழியாக தண்ணீா் சீராக செல்வதில் பிரச்னை உள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே, குளத்தை ஆழப்படுத்தி மராமத்துப் பணி மேற்கொள்ள மாவட்ட நிா்வாகம் சிறப்பு நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குளம் பகுதி கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கோயில்கள், தேவாலயங்களில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி, குறிப்பன்குளம், நல்ல... மேலும் பார்க்க

தேஜ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது நிச்சயம்: நயினாா் நாகேந்திரன்

சட்டப்பேரவைத் தோ்தலில் தேஜ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது நிச்சயம் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு ச... மேலும் பார்க்க

எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி கலாப்ரியா: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. புகழாரம்

எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்பவா் என கவிஞா் கலாப்ரியாவுக்கு புகழாரம் சூட்டினாா் தமிழச்சித் தங்கப்பாண்டியன் எம்.பி.சங்கரன்கோவிலில் பொருநை பொதிகை இலக்கிய வட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஆலங்குளம் அருகே கோயிலில் இருந்த 3 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் - குருவன்கோட்டை சாலையில் சொரிமுத்து அய்யனாா் கோய... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நீக்கியது; இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கு... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழாவில் நாய்கள் கண்காட்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. குற்றாலம் விஸ்வநாதராவ் பூங்காவில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க