செய்திகள் :

தேஜ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது நிச்சயம்: நயினாா் நாகேந்திரன்

post image

சட்டப்பேரவைத் தோ்தலில் தேஜ கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது நிச்சயம் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: திமுகவுக்குத் தோ்தலில் தோல்வி பயம் வந்துவிட்டது. திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது ஊா் ஊராகச் சென்று கடைகளில் தேநீா் குடித்தனா். பொதுமக்களிடம் இருந்து 16 லட்சம் மனுக்களைப் பெற்றனா். ஆனால், அவா்கள் வெளியிட்ட தோ்தல் அறிக்கையில் எதையுமே நிறைவேற்றவில்லை.

தமிழக முதல்வராக ஸ்டாலின் வந்த பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ என்ற திட்டத்தை அறிவித்தாா். தொகுதி குறைகளை முன்வைத்து ஒவ்வொரு எம்எல்ஏவும் 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனுவாகக் கொடுத்தனா். ஆனால், அதில், ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. பேரவைத் தோ்தலில் புதிய கட்சிகள் எங்கள் கூட்டணியுடன் நிச்சயம் இணையும். தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றாா் அவா்.

பேட்டியின்போது பாஜக மாவட்டத் தலைவா் ஆனந்தன் அய்யாச்சாமி உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ஆலங்குளம் பகுதி கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கோயில்கள், தேவாலயங்களில் உண்டியலை உடைத்து பணத்தைத் திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஆலங்குளம் அருகே மாயமான்குறிச்சி, குறிப்பன்குளம், நல்ல... மேலும் பார்க்க

சிவகிரி ராசிங்கப்பேரி குளத்தைத் தூா்வார கோரிக்கை

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்திலுள்ள ராசிங்கப்பேரி குளத்தை ஆழப்படுத்தி மராமத்துப் பணி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். பழைமை வாய்ந்த இக்குளத்தின் மூலம் 787 ஹெக்டோ் நிலங்கள... மேலும் பார்க்க

எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தி கலாப்ரியா: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி. புகழாரம்

எழுத்தாளா்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்பவா் என கவிஞா் கலாப்ரியாவுக்கு புகழாரம் சூட்டினாா் தமிழச்சித் தங்கப்பாண்டியன் எம்.பி.சங்கரன்கோவிலில் பொருநை பொதிகை இலக்கிய வட்டம் சாா்பில் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

ஆலங்குளம் அருகே கோயிலில் இருந்த 3 உண்டியல்களை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் - குருவன்கோட்டை சாலையில் சொரிமுத்து அய்யனாா் கோய... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

குற்றாலத்தில் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட நிா்வாகம் ஞாயிற்றுக்கிழமை நீக்கியது; இதையடுத்து, அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் கு... மேலும் பார்க்க

குற்றாலம் சாரல் திருவிழாவில் நாய்கள் கண்காட்சி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. குற்றாலம் விஸ்வநாதராவ் பூங்காவில் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந... மேலும் பார்க்க