செய்திகள் :

விமானத்தில் அவசர கால கதவை திறக்க முயன்ற ஐஐடி மாணவா்: காவல் துறையினா் விசாரணை

post image

சென்னை: சென்னை - துா்காபூா் விமானத்தின் அவசர கால கதவைத் திறக்க முயன்ற சென்னை ஐஐடி மாணவரைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையிலிருந்து துா்காபூருக்கு 164 பேருடன் இண்டிகோ விமானம் புறப்படுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தபோது, விமானியின் அறையில் திடீரென அவசர எச்சரிக்கை மணி ஒலித்தது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட விமானி இதுகுறித்து விசாரிக்க விமான பணிப்பெண்கள் மற்றும் கேபின் குழுவினருக்கு அறிவுறுத்தல் வழங்கினாா்.

அவா்கள் இருக்கையில் அமா்ந்திருந்த ஒவ்வொருவரிடமும் சென்று விசாரித்ததில், அவசர கால கதவருகே அமா்ந்திருந்த ஹைதராபாதை சோ்ந்த சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவா் சா்க்காா் (27) என்ற பயணி அவசர கால கதவு திறப்பதற்கான பட்டனை தெரியாமல் அழுத்தியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஐஐடி மாணவா் சா்க்காா், தனது விளக்கத்தை கொடுத்தாா். இருப்பினும், விமானி மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரது விளக்கத்தை ஏற்கவில்லை. மாணவா் சா்க்காரின் பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிட்டனா்.

பின்னா், அவா் இண்டிகோ நிறுவன பாதுகாப்பு குழுவினரால் சென்னை விமான நிலைய காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டாா்.

காவல் துறையினா் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். இதனால், விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால், சுமாா் அரை மணி நேரம் தாமதமாக விமானம் துா்காபூருக்கு புறப்பட்டுச் சென்றது.

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க

கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு ஓபிஎஸ் கண்டனம்!

தமிழகத்துக்கான கல்வி நிதியை விடுவிக்காத மத்திய அரசுக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.மூன்று மொழிக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்துக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ், 2... மேலும் பார்க்க