செய்திகள் :

போர் நிறுத்தம் ஏற்பு! இஸ்ரேலின் வான்வழி மீண்டும் திறப்பு!

post image

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்களால், மூடப்பட்ட இஸ்ரேலின் வான்வழிப் பாதைகள் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையில் 12 நாள்களாக நடைபெற்று வந்த போரானது நிறுத்தப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (ஜூன் 24) காலை அறிவித்தார். ஆனால், இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை ஈரான் ராணுவம் தொடர்ந்து நடத்தி வந்தது.

இதனால், அந்நாட்டுக்கு இயக்கப்பட்ட அவசரகால சிறப்பு விமானங்கள் உள்பட அனைத்து பயணிகள் விமானங்களின் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு, அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரையில் அதன் வான்வழிப் பாதைகள் முழுவதுமாக மூடப்படுவதாக இஸ்ரேல் அறிவித்தது.

இந்நிலையில், தற்போது போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஈரானும் போர்நிறுத்தத்தை ஏற்பதாக, அந்நாட்டு அரசின் தொலைக்காட்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து இயக்கப்படும் அவசரகால சிறப்பு விமானங்களுக்காக மட்டும் அந்நாட்டின் வான்வழிப் பாதை மீண்டும் திறக்கப்படுவதாக, இஸ்ரேல் விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக, ஈரான் - இஸ்ரேல் இடையிலான போரினால், இருநாடுகளும் தங்களது வான்வழிப் பாதைகளை மூடின. இருப்பினும், அந்நாடுகளில் சிக்கியுள்ள வெளிநாட்டவரை மீட்பதற்காக சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டோம்; மீறினால் தக்க பதிலடி கொடுப்போம்! - இஸ்ரேல் பிரதமர்

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் வெற்றி யாருக்கு?

கடந்த 12 நாள்களாக நடைபெற்று வந்த மோதலை முடித்துக்கொள்ள இஸ்ரேலும், ஈரானும் ஒருவழியாக ஒப்புக்கொண்டுள்ளன.இந்த ஒப்பந்தத்தை மீறுவதாக ஈரான் மீது இஸ்ரேலும், இஸ்ரேல் மீது ஈரானும், இரு நாடுகளையும் சேர்த்து அமெ... மேலும் பார்க்க

போா் நிறுத்தம்: இஸ்ரேல்-ஈரான் ஒப்புதல்

போரை நிறுத்த இஸ்ரேலும், ஈரானும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன. அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் தலையீட்டால், 12 நாள்களாக இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமாக நடைபெற்று வந்த போா் முடிவுக்கு வந்துள்ளது. ஈரானின் ... மேலும் பார்க்க

ஈரான் - இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம்: அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இந்தியா வரவேற்பு

இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதை வரவேற்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.மத்திய கிழக்கு ஆசியப் பகுதியிலுள்ள இரு பெரும் நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த இரு வார க... மேலும் பார்க்க

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால், அதை மதிப்போம்: ஈரான்

இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்தால் அதனை ஈரான் மதிக்கும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஈரான் இடையே 12 நாள்களாக நடைபெற்றுவந்த மோதல் இன்றுடன் முடிவுக்கு வருவதாக அமெரிக்... மேலும் பார்க்க

சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு!

சீன துணை அதிபர் ஹான் ஜெங் உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (ஜூன் 24) சந்தித்தார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர்களுக்கான 20வது கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், இ... மேலும் பார்க்க

இனி ஒரு குண்டுகூட பாயக்கூடாது! -இஸ்ரேலுக்கு டிரம்ப் எச்சரிக்கை

இஸ்ரேல் தமது தாக்குதல் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கறாராக எச்சரித்திருக்கிறார்.அமெரிக்காவுடன் மிக நெருக்கமாக தோழமை பாராட்டி வரும் யூத பூமியான இஸ்ரேலுக்... மேலும் பார்க்க